கோவாவில் இன்று 355 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
பனாஜி,
கோவா சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, கோவாவில் கடந்த 24 மணி நேரத்தில் 355 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் கோவாவில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 11,994 ஆக அதிகரித்துள்ளது.
இதுவரை அங்கு 111 பேர் கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்துள்ளனர். தற்போது 3,825 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 8,058 ஆக அதிகரித்துள்ளது.
அமீரகத்தில் பல்வேறு பகுதிகளில் கடந்த 24 மணி நேரத்தில் செய்யப்பட்ட 1 லட்சத்து 85 ஆயிரத்து 599 டி.பி.ஐ. மற்றும் பி.சி.ஆர். பரிசோதனை முடிவுகளில், 3 ஆயிரத்து 434 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது நேற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.