கோவாவில் இன்று 497 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
பனாஜி,
கோவா மாநில சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, கோவாவில் இன்று 497 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அங்கு மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 15,027 ஆக அதிகரித்துள்ளது.
கோவாவில் இதுவரை 165 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். தற்போது அங்கு 3,351 பேர் மருத்துவமனைகளில் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வரும் நிலையில், இதுவரை 11,511 பேர் பாதிப்பில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
அமீரகத்தில் பல்வேறு பகுதிகளில் கடந்த 24 மணி நேரத்தில் செய்யப்பட்ட 1 லட்சத்து 95 ஆயிரத்து 866 டி.பி.ஐ. மற்றும் பி.சி.ஆர். பரிசோதனை முடிவுகளில், 3 ஆயிரத்து 25 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது நேற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.