சென்னையை தவிர்த்து பிற மாவட்டங்களில் 3,897-பேருக்கு தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.
சென்னை,
தமிழகத்தில் கொரோன தொற்று வேகமாக பரவி வருகிறது. கொரோனா தடுப்பு பணிகளை தமிழக அரசு முழு வீச்சில் மேற்கொண்டு வரும் நிலையிலும் தொற்று பரவல் முழுமையாக கட்டுக்குள் வந்தபாடில்லை. தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,185-பேருக்கு கொரோன தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதேபோல், 68-பேர் உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில் இதுவரை கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 6,46,128-ஆக உள்ளது.
சென்னையில் மட்டும் 1,288-பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையை தவிர்த்து பிற மாவட்டங்களில் 3,897-பேருக்கு தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. மாவட்ட வாரியான பாதிப்பு விவரத்தை கீழ் காணலாம்.