தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் 7 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை,
தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் 7 மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும், சென்னை உட்பட வட தமிழக மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளதாக கூறிய சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம்,
தமிழக கடலோரப் பகுதியில் நிலவும் வளிமண்டல சுழற்சியால் மழைக்கு வாய்ப்பு உள்ளது. 27 மற்றும் 28 ஆகிய தேதிகளில் தென் தமிழக மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும்” எனவும் தெரிவித்துள்ளது.
நெல்லை, தென்காசி மாவட்டங்களில் கொட்டித்தீர்த்த கனமழையால் தாமிர பரணி ஆற்றில் நேற்று வெள்ளம் பெருக்கெடுத்ததால் தண்ணீர் சீறிப்பாய்ந்தது. வீடுகளில் வெள்ளம் புகுந்ததால், படகு மூலம் பொதுமக்கள் மீட்கப்பட்டனர்.
நெல்லை, தென்காசி மாவட்டங்களில் கொட்டித்தீர்த்த கனமழையால் தாமிரபரணி ஆற்றில் நேற்று வெள்ளம் பெருக்கெடுத்தது. வீடுகளில் வெள்ளம் புகுந்ததால், படகு மூலம் மக்கள் மீட்கப்பட்டனர்.
கடலூர் மாவட்டம் முழுவதும் விடிய, விடிய கனமழை பெய்தது. இதில் அதிகபட்சமாக மே.மாத்தூரில் 20 செ.மீ. மழை கொட்டியது. தரைப்பாலங்கள் வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்டதால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.