தமிழகத்தில் 16-ந் தேதி கொரோனா தடுப்பூசி; மதுரையில் தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர் பழனிசாமி + "||" + Corona vaccine in Tamil Nadu on the 16th; Chief Minister Palanisamy is starting in Madurai
தமிழகத்தில் 16-ந் தேதி கொரோனா தடுப்பூசி; மதுரையில் தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர் பழனிசாமி
தமிழகத்தில் 16-ந் தேதி கொரோனா தடுப்பூசி போடும் பணியை முதலமைச்சர் பழனிசாமி மதுரையில் தொடங்கி வைக்கிறார்.
சென்னை,
தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்க கடந்த மார்ச் 24-ந் தேதியில் இருந்து ஊரடங்கு உத்தரவு நடைமுறையில் உள்ளது. இந்த நிலையில் கொரோனா தொற்றிலிருந்து பாதுகாத்துக் கொள்வதற்கான தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் இந்த தடுப்பூசி போடும் பணியை பிரதமர் நரேந்திர மோடி வருகிற 16-ந் தேதியன்று தொடங்கி வைக்கிறார். அதற்காக இந்தியாவின் அனைத்து பகுதிகளுக்கும் தடுப்பூசி மருந்துகள் அனுப்பப்பட்டு வருகின்றன.
தமிழகத்தில் இதை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி 16-ந் தேதி மதுரை ராஜாஜி அரசு ஆஸ்பத்திரியில் தொடங்கி வைக்கிறார். பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி நிரல் இன்னும் அரசுக்கு வரவில்லை.
அவரது நிகழ்ச்சிக்கு ஏற்ப முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொள்ளும் இந்த நிகழ்ச்சிக்கான நேரம் ஏற்பாடு செய்யப்படும் என்று உயர் அதிகாரிகள் தெரிவித்தனர்.
தேர்தல் ஆணையம் உத்தரவின்படி தேர்தல் பணியில் ஈடுபடும் தாம்பரம் நகராட்சியில் பணிபுரியும் ஊழியர்கள் 714 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடுவது குறித்து நகராட்சி கமிஷனர் சித்ரா தலைமையில் ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது.