மத்திய வேளாண் சட்ட நகல்களை எரித்து போகி கொண்டாடிய விவசாயிகள் + "||" + Protesting farmers at Ghazipur border burned the copies of the three farm laws on the occasion of Lohri
மத்திய வேளாண் சட்ட நகல்களை எரித்து போகி கொண்டாடிய விவசாயிகள்
போகிப் பண்டிகையை முன்னிட்டு டெல்லியில் போராடும் விவசாயிகள் மத்திய வேளாண் சட்ட நகல்களை எரித்து கொண்டாடினார்கள்.
புதுடெல்லி
மத்திய வேளாண் சட்டங்களுக்கு எதிராக பஞ்பாப், அரியானா உள்ளிட்ட மாநிலங்களின் விவசாயிகள் கடந்த 50 நாள்களாக தொடர்ந்து டெல்லியில் போராடி வருகின்றனர்.
இந்த நிலையில், போகிப் பண்டிகையை முன்னிட்டு வேளாண் சட்ட நகல்களைடெல்லி, அரியானா எல்லைகளில் போராடி வரும் ஆயிரக்கணக்கான விவசாயிகள் எரித்துக் கொண்டாடினார்கள்.
ஜந்தர் - மந்தரில் போராடி வரும் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர்களும் வேளாண் சட்ட நகல்களை எரித்தனர்.
சுப்ரீம் கோர்ட்டில் தொடரப்பட்ட வழக்கில் திங்கள்கிழமை பிறப்பித்த உத்தரவில் வேளாண் சட்டங்களை தற்காலிகமாக நிறுத்தி வைக்க உத்தரவிட்டு, விவசாயிகளுடன் பேச குழு அமைத்து உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.