அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனுடன், கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ காணொலி காட்சி மூலம் நாளை சந்திக்க உள்ளார்.
வாஷிங்டன்,
அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் மற்றும் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ இடையிலான காணொலி காட்சி வாயிலான சந்திப்பு நாளை நடைபெற உள்ளது.
ஜோ பைடன் ஜனாதிபதியாக பதவியேற்ற பிறகு வெளிநாட்டு தலைவர் ஒருவருடன் நடக்கும் முதல் சந்திப்பு இதுவாகும். இந்த சந்திப்பின் போது பொருளாதாரம் வர்த்தகம் உட்பட பல்வேறு துறைகளில் இரு நாடுகளின் ஒத்துழைப்பை பலப்படுத்துவது குறித்து இருநாட்டு தலைவர்களும் ஆலோசிப்பார்கள் என வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.