பாலத்தில் இருந்து கவிழ்ந்து ஆற்றுக்குள் விழுந்த கார் - ஒரேகுடும்பத்தை சேர்ந்த 7 பேர் பலி


பாலத்தில் இருந்து கவிழ்ந்து ஆற்றுக்குள் விழுந்த கார் - ஒரேகுடும்பத்தை சேர்ந்த 7 பேர் பலி
x
தினத்தந்தி 3 Oct 2021 12:31 AM GMT (Updated: 3 Oct 2021 12:31 AM GMT)

பாகிஸ்தானில் கார் பாலத்தில் இருந்து கவிழ்ந்து ஆற்றுக்குள் விழுந்த விபத்தில் ஒரேகுடும்பத்தை சேர்ந்த 7 பேர் உயிரிழந்தனர்.

லாகூர்,

பாகிஸ்தானின் இஸ்லாமாபாத் நகரில் கடந்த வெள்ளிக்கிழமை இரவு ஒரு திருமண நிகழ்ச்சியில் பங்கேற்றுவிட்டு ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 பேர் காரில் வீடு திரும்பிக்கொண்டிருந்தனர். 4 பெண்கள், 2 குழந்தைகள் மற்றும் ஒரு ஆண் அந்த காரில் பயணம் செய்துள்ளனர்.

இரவு நேரத்தில் பாலத்தில் உள்ள சாலையில் சென்றுகொண்டிருந்தபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார் பாலத்திற்கு கீழே உள்ள ஆற்றில் விழுந்து விபத்துக்குள்ளானது. 

இரவு நேரம் என்பதால் இந்த விபத்து குறித்து யாருக்கும் தெரியவில்லை. மறுநாளான நேற்று ஆற்றில் கார் ஒன்று அடித்து செல்லப்படுவது குறித்து மீட்புக்குழுவினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. இதையடுத்து, மீட்புக்குழுவினர் காரை மீட்டனர். 

ஆனால், ஆற்றுக்குள் கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் காரில் பயணம் செய்த ஒரேகுடும்பத்தை சேர்ந்த 7 பேரும் ஆற்றில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story