விழுப்புரத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை - மாவட்ட கலெக்டர் அறிவிப்பு


கோப்புப்படம்
x
கோப்புப்படம்
தினத்தந்தி 7 Nov 2021 11:44 PM GMT (Updated: 7 Nov 2021 11:44 PM GMT)

விழுப்புரத்தில் தொடர் மழை காரணமாக அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட கலெக்டர் அறிவித்துள்ளார்.

விழுப்புரம், 

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்து இருக்கிறது. சென்னை உள்பட பல்வேறு மாவட்டங்களில் பரவலாக நல்ல மழை பெய்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் இன்று (திங்கட்கிழமை) முதல் 11-ந் தேதி (வியாழக்கிழமை) வரை மிதமான மழை முதல் அதி கனமழை வரை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்து இருக்கிறது.

வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி நாளை உருவாகிறது என்றும், கடலூர், விழுப்புரம் உள்ளிட்ட 5 மாவட்டங்களில் இன்று (திங்கட்கிழமை) மிக கனமழை பெய்யக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

இந்நிலையில் விழுப்புரத்தில் தொடர் மழை காரணமாக அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட கலெக்டர் அறிவித்துள்ளார். 

Next Story