செய்யாறு அருகே கார் மீது வேன் மோதி விபத்து : சிறுவன் உள்பட 2 பேர் பலி


செய்யாறு அருகே கார் மீது வேன் மோதி விபத்து : சிறுவன் உள்பட 2 பேர் பலி
x
தினத்தந்தி 8 Nov 2021 8:01 AM GMT (Updated: 8 Nov 2021 8:01 AM GMT)

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அருகே மாமண்டூரில் கார் மீது வேன் மோதிய விபத்தில் 8 வயது குழந்தை உள்பட 2 பேர் உயிரிழந்துள்ளனர்.

சென்னை

காஞ்சிபுரம் அருகே உள்ள வையாவூர் கிராமத்தைச் சேர்ந்த இளங்கோவன் (33) தனது குடும்பத்தினருடன்  மாமண்டூர் கிராமத்தில் நடக்கும் திருமணத்திற்கு  காரில் சென்றார். 

காரை இளங்கோவன் ஓட்டினார்.  மாமண்டூர் ஐந்து கண் பாலத்தின் அருகே வரும்  எதிரே வந்த வேன்  கார் மீது மோதியது . இதில்  கார் பள்ளத்தில் கவிழ்ந்ததில் காரில் இருந்த இளங்கோவன் சித்தப்பா  குழந்தைவேலு (60) . இளங்கோவனின் 8 வயது மகன் விஷ்வா ஆகியோர் அதே இடத்தில் பரிதாபமாக உயிரிழந்தனர். 

மேலும் 5 பேர்  படுகாயம் அடைந்தனர் அவர்கள் காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.


Next Story