மும்பை குண்டுவெடிப்பு குற்றவாளிகளுடன் மராட்டிய மந்திரி நவாப் மாலிக்கிற்கு தொடர்பு - தேவேந்திர பட்னாவிஸ் அதிரடி


மும்பை குண்டுவெடிப்பு குற்றவாளிகளுடன் மராட்டிய மந்திரி நவாப் மாலிக்கிற்கு தொடர்பு - தேவேந்திர பட்னாவிஸ் அதிரடி
x
தினத்தந்தி 9 Nov 2021 10:53 AM GMT (Updated: 9 Nov 2021 10:53 AM GMT)

மும்பை குண்டுவெடிப்பு குற்றவாளிகளுடன் மராட்டிய மந்திரி நவாப் மாலிக்கிற்கு தொடர்பு உள்ளது என பா.ஜ.க.வின் மூத்த தலைவர் தேவேந்திர பட்னாவிஸ் கூறி உள்ளார்.

மும்பை

சொகுசு கப்பலில் போதை விருந்தில் பங்கேற்ற வழக்கில் நடிகர் ஷாருக்கான் மகன் ஆர்யன் கானை மும்பை போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் கடந்த மாதம் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட ஆர்யன் கான் 26 நாட்களுக்கு பின்னர் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார். 

ஆர்யன் கானை கைது செய்த போதைப்பொருள் தடுப்பு பிரிவின் மும்பை பிரிவு தலைவரன சமீர் வான்கடே செயல்பட்டு வருகிறார். ஆர்யன் கான் கைது சம்பவத்தில் இருந்து சமீர் வான்கடே மீது தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், மராட்டிய மந்திரியுமான நவாப் மாலிக் பல்வேறு குற்றச்சாட்டுகளை சுமத்தி வருகிறார். 

இந்த விவகாரம் மராட்டிய அரசியலில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இந்த விவகாரத்தை சுற்றி பல்வேறு கட்சிகள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றன. அந்த வகையில், போதைப்பொருள் விவகாரம் குறித்து மராட்டிய முன்னாள் முதல்-மந்திரியும், பா.ஜ.க. மூத்த தலைவருமான தேவேந்திர பட்னாவிஸ்  நவாப் மாலிக் மீது குற்றச்சாட்டுகளை  முன்வைத்தார்.

நவாப் மாலிக்கின் நிழல் உலகத்துடனா தொடர்பு குறித்த ஆதாரங்களை வெளிப்படுத்துவேன். தீபாவளி கடந்து செல்வதற்காக நான் காத்திருக்கிறேன்’ என கூறினார்.

அதன்படி இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்த  தேவேந்திர பட்னாவிஸ் கூறியதாவது:-

1993 மும்பை குண்டுவெடிப்பில் குற்றவாளி எனத் தீர்ப்பளிக்கப்பட்ட நிழல் உலக நபர் ஒருவருடன் நவாப் மாலிக் சொத்து பேரம் நடத்தி உள்ளார்.

குர்லாவில் 2.80 ஏக்கர் நிலம் எல்பிஎஸ் சாலையில் உள்ள கோவாலா வளாகம் என்று அதுவாகும். இந்த பிளாட் சாலிடஸ் இன்வெஸ்ட்மென்ட் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த நிறுவனம் நவாப் மாலிக்கின் குடும்பத்துடன் தொடர்புடையது. அவரும் அந்த நிறுவனத்தில் இருந்தார், ஆனால் அவர் மந்திரியான  பிறகு அதில் இருந்து விலகிவிட்டார்.

இது நிழல் உலக நபர்களிடம்  இருந்து 30 லட்ச ரூபாய்க்கு நிலம் வாங்கப்பட்டது. வெறும் 20 லட்சம் ரூபாய் மட்டுமே கொடுக்கப்பட்டது.

"இந்த ஒப்பந்தம் எப்போது நடந்தது என்பதுதான் என் கேள்வி. நீங்கள் மந்திரியாக  இருந்தீர்கள். சலீம் படேல் யார் என்று உங்களுக்குத் தெரியாதா? குற்றவாளிகளிடம் ஏன் நிலம் வாங்குகிறீர்கள்? ஏன் எல்பிஎஸ் சாலையில் உள்ள மூன்று ஏக்கர் நிலத்தை ரூ. 30 லட்சத்திற்கு விற்றீர்கள்.சலீம் படேல் நிழல் உலக தாதா தாவூத் இப்ராகிமின் உதவியாளர் மற்றும் ஹசீனா பார்கரின் (தாவூத்தின் சகோதரி) டிரைவராக இருந்தார்.

தாவூத் தப்பிய பிறகு, சலீம் படேல் மூலம் ஹசீனா பார்கர் சொத்துக்களை வாங்கினார். 1993 மும்பை குண்டுவெடிப்புக்கு மூளையாக செயல்பட்டவர் தாவூத் இப்ராகிம்.

இது பாதாள உலகத்துடன் நேரடி தொடர்பு. குண்டுவெடிப்புக்கு சதி செய்தவர்களுடன் நீங்கள் வியாபாரம் செய்கிறீர்களா? இதையெல்லாம் நான் திறமையான அதிகாரிகளுக்கு அனுப்புகிறேன், மேலும் சரத் பவாருக்குத் தெரியும். அவரது  மந்திரி  என்ன செய்தார் என்று கூறினார்.

Next Story