வட மாநிலங்களில் அடுத்த இரு நாட்களுக்கு குளிர் மேலும் அதிகரிக்கும்: வானிலை மையம்
அடுத்த இரண்டு நாட்களுக்கு வட இந்தியாவில் குளிர் மேலும் அதிகரிக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
புதுடெல்லி,
இந்திய வானிலை ஆய்வு மையமானது பஞ்சாப், அரியானா மற்றும் வடக்கு ராஜஸ்தானின் சில பகுதிகளில் அடுத்த இரண்டு நாட்களுக்கு குளிர் மேலும் அதிகரிக்கும் என்று தெரிவித்துள்ளது.
அதே நேரத்தில் ஸ்ரீநகர், பகல்காம் மற்றும் குல்மார்க் ஆகிய இடங்களில் கடும் குளிர் நிலவும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வறண்ட வடமேற்கு காற்று காரணமாக வட இந்தியாவின் பல இடங்களில் அடுத்த இரண்டு நாட்களுக்கு இரவு நேரங்களில் வெப்பநிலை மேலும் குறையும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.
Related Tags :
Next Story