இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் மாட்டிறைச்சி, பன்றிக் கறி சாப்பிட தடை - பிசிசிஐ மறுப்பு!


இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் மாட்டிறைச்சி, பன்றிக் கறி சாப்பிட தடை - பிசிசிஐ மறுப்பு!
x
தினத்தந்தி 24 Nov 2021 3:17 AM GMT (Updated: 24 Nov 2021 4:57 AM GMT)

இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் ஹலால் உணவு வகைகளை மட்டுமே சாப்பிட வேண்டும் என உத்தரவிட்டுள்ளதாக வெளியான செய்திக்கு பிசிசிஐ மறுப்பு.

புதுடெல்லி,

இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் மாட்டிறைச்சி மற்றும் பன்றிக் கறி சாப்பிட தடை விதிக்கப்பட்டுள்ளது. ஹலால் உணவு மட்டுமே சாப்பிட வேண்டும் என பிசிசிஐ உத்தரவிட்டுள்ளது என்ற அறிவிப்புக்கு பிசிசிஐ மறுப்பு தெரிவித்துள்ளது.

இந்தியா நியூசிலாந்து அணிகளுக்கு இடையே நாளை கான்பூரில் முதல் டெஸ்ட் போட்டி தொடங்க உள்ளது.இந்த போட்டியில் பங்கேற்கும் இந்திய அணி வீரர்களுக்கான உணவுப் பட்டியலை இந்திய கிரிக்கெட் அணி நிர்வாகம் வெளியிட்டுள்ளது.

அதன்படி, மாட்டிறைச்சி மற்றும் பன்றிக் கறி அசைவ உணவு வகைகளை எந்த உணவு வடிவிலும் உட்கொள்ள கூடாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது எனவும் அசைவ உணவுகளில் ஹலால் உணவுகளை மட்டுமே சேர்த்துக் கொள்ளலாம் என்று கூறப்பட்டுள்ளதாக தகவல் வெளியான நிலையில் பிசிசிஐ அதை மறுத்துள்ளது. 

தற்போது அறிவிக்கப்பட்டுள்ள உணவுப் பட்டியலின் படி, கோழி இறைச்சியும், ஆட்டு இறைச்சியும் மட்டுமே அசைவ உணவுகளாக உள்ளன என்று தகவல் வெளியாகியது. பிசிசிஐயின் இந்த முடிவுக்கு பல்வேறு தரப்புகளில் இருந்தும் கடும் எதிர்ப்பு கிளம்பியது.

இந்நிலையில், இதுகுறித்து பிசிசிஐயின் பொருளாளர் அருண் துமால் கூறியிருப்பதாவது, “இந்திய கிரிக்கெட் அணி வீரர்களுக்கு பிசிசிஐயால் அத்தகைய உத்தரவு எதுவும் வழங்கப்படவில்லை. இந்திய வீரர்கள் தங்கள் விருப்பப்படி உணவு வகைகளை சாப்பிடலாம்”  என்று தெரிவித்துள்ளார்.இதனால் இந்த சர்ச்சை முற்றுப்பெற்றுள்ளது.

Next Story