சிம்புவின் 'மாநாடு' பட ரிலீஸ் திடீர் ஒத்திவைப்பு
நாளை வெளியாக இருந்த நடிகர் சிம்புவின் 'மாநாடு' பட ரிலீஸ் தள்ளிவைக்கப்பட்டுள்ளதாக தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி டுவிட்டரில் அறிவித்துள்ளார்.
சென்னை,
வெங்கட்பிரபு இயக்கத்தில் சிம்பு, கல்யாணி பிரியதர்ஷன், எஸ்.ஏ சந்திரசேகர், எஸ்.ஜே.சூர்யா உள்ளிட்டோர் நடித்துள்ள ’மாநாடு’ முதலில் தீபாவளிக்கு வெளியாவதாக இருந்தது. ஆனால், சில காரணங்களால் மாநாடு நவம்பர் 25 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. இதனால், சிம்பு ரசிகர்கள் உற்சாகம் அடைந்தனர்.
இந்த நிலையில், மாநாடு படத்தின் ரிலீஸ் மீண்டும் தள்ளிவைக்கப்பட்டுள்ளது. படத்தின் தயாரிப்பாளரான சுரேஷ் காமாட்சி இது குறித்து தனது டுவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது; நிறைய கனவுகளோடு படைக்கப்பட்ட ஓர் படைப்பு. இதின் பிரசவத்தை எதிர்நோக்கிக் காத்திருந்திருந்தேன்
தவிர்க்க இயவாத காரணங்களால் #மாநாடு வெளியீடு தள்ளி வைக்கப்படுகிறது என்பதை மிகுந்த வலியோடு தெரிவித்துக்கொள்கிறேன். வெளியாகும் தேதி பின்னர் அறிவிக்கிறேன்ஏற்பட்ட சிரமங்களுக்கு வருந்துகிறேன்” எனத்தெரிவித்துள்ளார்.
Related Tags :
Next Story