இந்தியா-மியான்மர் எல்லையில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்


இந்தியா-மியான்மர் எல்லையில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்
x
தினத்தந்தி 26 Nov 2021 2:05 AM GMT (Updated: 26 Nov 2021 2:05 AM GMT)

மேற்கு வங்காளம், திரிபுரா, அசாம் உள்ளிட்ட மாநிலங்களிலும் நில அதிர்வு உணரப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

திஸ்பூர்,

இந்தியா-மியான்மர் எல்லையில் இன்று அதிகாலை 5.15 மணியளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் 6.1 என்ற அளவில் பதிவாகியிருந்ததாக இந்திய புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மிசோரம் மாநிலம் தென்சால் பகுதியில் இருந்து 73 கி.மீ. தென்கிழக்கில் இந்த நிலநடுக்கத்தின் மையம் அமைந்திருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அதே சமயம் இந்த நிலநடுக்கம் காரணமாக மேற்கு வங்காளம், திரிபுரா, அசாம் உள்ளிட்ட மாநிலங்களிலும் நில அதிர்வு உணரப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. வங்காளதேசத்தின் ஒரு சில பகுதிகளிலும் நில அதிர்வு ஏற்பட்டதாக டுவிட்டரில் பலர் பதிவிட்டு வருகின்றனர். இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதங்கள் குறித்த உடனடி விவரங்கள் இதுவரை வெளியாகவில்லை. 

Next Story