கலைஞர் உணவகத்திற்கு வரவேற்பு: அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ பேச்சு


கலைஞர் உணவகத்திற்கு வரவேற்பு:  அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ பேச்சு
x
தினத்தந்தி 27 Nov 2021 12:11 AM GMT (Updated: 27 Nov 2021 12:11 AM GMT)

கலைஞர் உணவகம் வந்தால் வரவேற்கிறோம், வாழ்த்துகிறோம் என்று அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ கூறியுள்ளார்.


மதுரை,

அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ மதுரையில் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசும்போது, தமிழகத்தில் எப்போது தேர்தல் வந்தாலும் அ.தி.மு.க. வெற்றி பெறும்.  பா.ஜ.க. ஒரு வளர்கின்ற கட்சி.  பா.ஜ.க.வினர் தங்கள் கட்சி வளர எதிர்க்கட்சி என சொல்லிக்கொள்வார்கள்.  மக்களின் பேராதரவோடு அ.தி.மு.க. தான் எதிர்க்கட்சியாக தமிழகத்தில் உள்ளது. பணபலம், அதிகார பலம் 2வது பட்சம்.  மக்கள் பலம் தான் முக்கியம்.

ஒரு தேர்தலில் ஜனநாயகத்தை நிலைநாட்ட மக்கள் விரும்பி வாக்களிக்க வேண்டும். ஜனநாயக அடிப்படையில் தேர்தல் நடைபெற வேண்டும். எந்தவிதமான அதிகார துஷ்பிரயோகம் இல்லாமல் தேர்தலை முதல்-அமைச்சர் நடத்துவார் என நினைக்கிறோம். தொடர்ந்து பேசிய அவர், கலைஞர் உணவகம் வந்தால் வரவேற்கிறோம். வாழ்த்துகிறோம் என கூறினார்.


Next Story