குளம் போல் தேங்கிய மழை நீர்...! பாத் டப்பை படகாக்கி மன்சூர் அலிகான் பயணம்...!


குளம் போல் தேங்கிய மழை நீர்...!  பாத் டப்பை படகாக்கி மன்சூர் அலிகான் பயணம்...!
x
தினத்தந்தி 27 Nov 2021 12:01 PM GMT (Updated: 27 Nov 2021 12:01 PM GMT)

நடிகர் மன்சூர் அலிகான் வீடு அமைந்துள்ள பகுதியில் மழைநீர் குளம் போல் தேங்கியுள்ளது.

சென்னை,

தமிழ் சினிமாவில் தனது தனித்துவ நடிப்பால் தனக்கென ஒரு தனி இடத்தைப் பிடித்தவர் நடிகர் மன்சூர் அலிகான். வில்லன், காமெடியனாக நடித்து வரும் மன்சூர் அலிகான், கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற சட்ட மன்ற தேர்தலில் சுயட்சையாக போட்டியிட்டு தோல்வியடைந்தார்.

கடந்த சில நாட்களாக தமிழகம் மற்றும் சென்னையில் கனமழை பெய்து வருகிறது. இதனால், சாலைகளில் தண்ணீர் தேங்கி வெள்ளம் போல் காட்சியளிக்கிறது.

வேளச்சேரி, கூடுவாஞ்சேரி உள்ளிட்ட இடங்களில் கழுத்தளவு தண்ணீர் தேங்கியுள்ளதால் அப்பகுதியில் உள்ள மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளார்கள். தண்ணீர் அதிகம் உள்ள இடங்களில் உள்ள மக்கள் வீட்டை விட்டு வெளியே வர முடியாத சூழல் எழுந்துள்ளது.

இந்த நிலையில் நடிகர் மன்சூர் அலிகான் வீடு அமைந்துள்ள பகுதியில் மழைநீர் குளம் போல் தேங்கியுள்ளது. அதில் பாத் டப்பில் மன்சூர் அலிகான் கப்பல் ஓட்டும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. "பொறந்தா தமிழ்நாட்டுல பொறக்கணும்.. சென்னை தண்ணியில மிதக்கணும்.. தமிழனாக பிறக்கணும் சென்னையில் கார் ஓட்டி மகிழனும் எனறு அவர் பாட்டு பாடினார்.

கடந்த ஆண்டு நிவர் புயலின் போதும் நடிகர் மன்சூர் அலிகான் வசிக்கும் பகுதியில் வெள்ளம் சூழ்ந்தது. அப்போது மன்சூர் அலிகான் இதுபோல் பாட்டுப்பாடி படகு பயணம் மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது.


Next Story