கர்நாடகாவில் தென் ஆப்பிரிக்காவை சேர்ந்த இருவருக்கு கொரோனா தொற்று


கர்நாடகாவில் தென் ஆப்பிரிக்காவை சேர்ந்த இருவருக்கு கொரோனா தொற்று
x
தினத்தந்தி 27 Nov 2021 4:01 PM GMT (Updated: 27 Nov 2021 4:05 PM GMT)

நவம்பர் 1 ஆம் தேதி முதல் 26 ஆம் தேதி வரையில் தென் ஆப்பிரிக்காவில் இருந்து 94 பேர் வருகை தந்துள்ளனர்.

பெங்களூரு,

தென் ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட புதிய வகை கொரோனாவுக்கு ஒமிக்ரான் எனப் பெயரிடப்பட்டுள்ளது. இதன் பரவலைத் தடுக்க பல்வேறு உலக நாடுகளும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தி வருகின்றன. பிரதமர் நரேந்திர மோடியும் இன்று  உயர் மட்ட அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார். 

புதிய வகை கொரோனா அச்சுறுத்தல் அதிகரித்து வரும் நிலையில், விமான நிலையங்களில் கண்காணிப்பை தீவிரப்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் பெங்களூரு சர்வதேச விமான நிலையத்தில் பயணிகள் கண்காணிக்கப்பட்டதில் தென் ஆப்பிரிக்காவைச் சேர்ந்த இருவருக்கு கொரோனா நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 

அவர்களது மாதிரிகள் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளன. பரிசோதனைகளின் முடிவிலேயே அது புதிய வகை கொரோனாவா இல்லையா என்பது தெரியவரும். இதனால், அவர்கள் இருவரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். 

நவம்பர் 1 ஆம் தேதி முதல் 26 ஆம் தேதி வரையில் தென் ஆப்பிரிக்காவில் இருந்து  94 பேர் வருகை தந்துள்ளனர். அவர்களை பரிசோதனை செய்ததில் இரண்டு பேருக்கு மட்டுமே தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. எனவே அச்சப்பட வேண்டிய அவசியம் இல்லை என பெங்களூரு ஊரக துணை ஆணையர் தெரிவித்துள்ளார். 


Next Story