ரூ.8 ஆயிரம் கோடி விமானத்தில் பறக்கும் மோடியால் விவசாயிகளின் கடன்களை தள்ளுபடி செய்ய முடியவில்லை: பிரியங்கா காந்தி


ரூ.8 ஆயிரம் கோடி விமானத்தில் பறக்கும் மோடியால் விவசாயிகளின் கடன்களை தள்ளுபடி செய்ய முடியவில்லை: பிரியங்கா காந்தி
x
தினத்தந்தி 27 Nov 2021 9:28 PM GMT (Updated: 27 Nov 2021 9:38 PM GMT)

ரூ.8 ஆயிரம் கோடி விமானத்தில் பறக்கும் மோடியால் விவசாயிகளின் கடன்களை தள்ளுபடி செய்ய முடியவில்லை என்று பிரியங்கா காந்தி பேசினார்.

உத்தரபிரதேச மாநிலம் பந்தேல்கண்ட் மாவட்டத்தில் நேற்று நடைபெற்ற காங்கிரஸ் கட்சியின் ‘உறுதிமொழி கூட்டத்தில்’ பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி பேசியதாவது:-

‘பிரதமரின் பெரும் தொழிலதிபர் நண்பர்களின் வருமானம் என்ன என்று உங்களுக்குத் தெரியுமா? அவர்கள் தினமும் ரூ.10 ஆயிரம் கோடி சம்பாதிக்கிறார்கள். நீங்களோ தினம் ரூ.27 ஈட்டுகிறீர்கள். இந்த அரசு உங்களுக்காக எதுவுமே செய்யவில்லை.

மோடி பயன்படுத்தும் விமானத்தின் விலை என்ன என்று உங்களுக்குத் தெரியுமா? ரூ.8 ஆயிரம் கோடி. அதில்தான் அவர் இங்கு வந்து உங்களிடம் பேசிச் செல்கிறார். ஆனால் உங்களின் வருமானம் உயரவில்லை. ரூ.8 ஆயிரம் விமானத்தில் பறக்கும் மோடியால் விவசாயிகளின் கடன்களை தள்ளுபடி செய்ய முடியவில்லை.’

இவ்வாறு அவர் பேசினார்.

Next Story