இந்தியாவில் புதிதாக 8,774 பேருக்கு கொரோனா பாதிப்பு: மேலும் 621 பேர் பலி....!


கோப்புப்படம்
x
கோப்புப்படம்
தினத்தந்தி 28 Nov 2021 4:34 AM GMT (Updated: 28 Nov 2021 4:34 AM GMT)

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 8,774 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

புதுடெல்லி, 

இந்தியாவில் மீண்டும் கொரோனா தினசரி பாதிப்பு 9 ஆயிரத்துக்கு கீழே வந்துள்ளது. இந்தியாவில் கடந்த சில தினங்களாக கொரோனா பாதிப்பு ஏறுமுகம் கண்டு வந்தது. அந்த நிலை நேற்று மாறியது. நேற்று காலை 8 மணியுடன் முடிந்த ஒரு நாளில் தினசரி பாதிப்பு என்பது மீண்டும் 9 ஆயிரத்துக்கு கீழே வந்தது. 

இந்நிலையில் இந்தியாவில் இன்று மேலும் 8,774 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. (கேரளாவில் மட்டுமே 4,741 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது). இதுதொடர்பாக மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவலின் அடிப்படையில், இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 8 ஆயிரத்து 774 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதியாகி உள்ளது. இதன்மூலம் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 3,45,72,523 ஆக அதிகரித்துள்ளது. 

அதேபோல், தொற்று பாதிப்புகளுக்கு ஒரே நாளில் 621 பேர் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 4,68,554 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து 9,481 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இதனால், குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 3,39,98,278 ஆக உயர்ந்துள்ளது. இதன்மூலம் குணமடைவோர் விகிதம் 98.34% ஆக உள்ளது.  

மேலும் கடந்த 543 நாட்களில் குறைந்த அளவாக கொரோனா தொற்றுக்கு தற்போது 1,05,691 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்தியாவில் இதுவரை 121.94,71,134 பேருக்கு (கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 82,86,058 பேர்) கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதனிடையே இந்தியாவில் கொரோனா பாதிப்பை கண்டறிய நேற்று ஒரே நாளில் 10,91,236 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாகவும், இதுவரை மொத்தம் 63,93,39,125 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாகவும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐ.சி.எம்.ஆர்) தெரிவித்துள்ளது.

Next Story