நீட் தேர்வை முழுமையாக திரும்பப் பெற மத்திய அரசிடம் கோரிக்கை - டி.ஆர்.பாலு பேட்டி


நீட் தேர்வை முழுமையாக திரும்பப் பெற மத்திய அரசிடம் கோரிக்கை - டி.ஆர்.பாலு பேட்டி
x
தினத்தந்தி 28 Nov 2021 11:12 AM GMT (Updated: 28 Nov 2021 11:12 AM GMT)

நீட் தேர்வை முழுமையாக திரும்பப் பெற மத்திய அரசிடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளதாக திமுக சார்பில் மக்களவை குழுத் தலைவர் டி.ஆர்.பாலு கூறினார்.

புதுடெல்லி,

டெல்லியில் மக்களவை குழுத் தலைவர் டி.ஆர். பாலு செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-

*மாணவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் நீட் தேர்வை திரும்பப்பெற வேண்டும்.

*3 வேளாண் சட்டங்களை திரும்பப்பெற வேண்டும், விளை பயிர்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை தொடர்பாக சட்டம் இயற்ற வேண்டும்.

*விலை வாசி உயர்வுக்கு முக்கிய காரணம் எரிபொருள் விலை உயர்வு, எனவே பெட்ரோல், டீசல் விலையை குறைக்க வேண்டும்.

*குடியுரிமை சட்டம் தொடர்பாக அவையில் பேச நேரம் ஒதுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளோம்.

தமிழகத்தில் ஏற்பட்டுள்ள  புதிய சேதங்களை மதிப்பிட மத்திய அரசு குழுவை அனுப்பி வைக்க வேண்டும். 

இவ்வாறு அவர் கூறினார். 

Next Story