மேற்கு வங்கத்தில் பிப்.3 ஆம் தேதி முதல் பள்ளி, கல்லூரிகள் திறப்பு
நாடு முழுவதும் கொரோனா பரவல் படிப்படியாக குறைந்துவரும் நிலையில் பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன.
கொல்கத்தா,
மேற்கு வங்காளத்தில் வருகிற பிப்ரவரி 3 ஆம் தேதி முதல் 8 முதல் 12 வகுப்பு வரையுள்ள பள்ளி மாணவர்கள் மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் நடைபெறும் என்று முதல் மந்திரி மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார்.
நாடு முழுவதும் கொரோனா பரவல் படிப்படியாக குறைந்துவரும் நிலையில் பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. கல்வி நிலையங்களும் திறக்கப்பட்டு வருகின்றன.
அந்த வகையில், மேற்கு வங்காளத்தில் வரும் 3 ஆம் தேதி முதல் 8 முதல் 12 வகுப்பு வரையுள்ள மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்படும் என்று தெரிவித்தார்.
Related Tags :
Next Story