அமெரிக்க அதிபராக டொனால்டு டிரம்ப் அதிகார பூர்வமாக தேர்வு


அமெரிக்க அதிபராக டொனால்டு டிரம்ப் அதிகார பூர்வமாக தேர்வு
x
தினத்தந்தி 20 Dec 2016 5:57 AM GMT (Updated: 20 Dec 2016 5:57 AM GMT)

அமெரிக்க அதிபர் தேர்தல் கடந்த நவம்பர் 8ம் தேதி நடைபெற்றது.இதில் ஜனநாயக கட்சியின் ஹிலாரி கிளிண்டன் தான் வெற்றி பெறுவார் என்று அனைவராலும் எதிர்பார்க்கப்பட்டது.

அமெரிக்க அதிபர் தேர்தல் கடந்த நவம்பர் 8ம் தேதி நடைபெற்றது.இதில் ஜனநாயக கட்சியின் ஹிலாரி கிளிண்டன் தான் வெற்றி பெறுவார் என்று அனைவராலும் எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் எதிர்பாராத விதமாக குடியரசு கட்சி வேட்பாளர் டொனால்டு டிரம்ப் வெற்றி பெற்றார்.

ஹிலாரி கிளிண்டன் 26 லட்சம் ‘பாப்புலர் ஓட்டு’ எனப்படும் மக்கள் ஓட்டுகளை பெற்றிருந்தாலும், காலேஜ் எனப்படும் தேர்வாளர்களின் வாக்குகளை அதிகம் பெற்று டிரம்ப் வெற்றி பெற்றார்.

டிரம்புக்கு 306 தேர்வாளர்களும், ஹிலாரிக்கு 232 தேர்வாளர்களும் வாக்களித்தனர்.

டிரம்ப் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டாலும் தேர்வாளர்கள் ஓட்டுகள் தான் அதிகாரபூர்வமான அதிபரை முடிவு செய்கிறது. இதற்கான தேர்தல் இன்று நடைபெறுகிறது.

இந்நிலையில் தேர்வாளர்கள் டிரம்புக்கு எதிராக வாக்களிக்க வேண்டும் என்றும், ஹிலாரியை ஆதரித்து வெற்றி பெறச் செய்ய வேண்டும் எனவும் பிரசாரம் தொடங்கப்பட்டு தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

மேலும், பொதுமக்களிடம் இருந்து குடியரசு கட்சி தேர்வாளர்களுக்கு நூற்றுக்கணக்கான இ-மெயில்கள் மற்றும் டெலிபோன் கால்கள் மூலம் கோரிக்கைகள் வைத்த வண்ணம் இருந்தனர்

டிரம்ப் 306 வாக்குகளை பெற்று வெற்றி பெற்றார். இதன்  மூலம் அவர்  அமெரிக்காவின் 45-வது அதிபர் ஆனார்

Next Story