இஸ்லாமியர்களை நாட்டுக்குள் அனுமதிக்க கூடாது என்று கூறியது சரியே: டொலான்டு டிரம்ப் திட்டவட்டம்


இஸ்லாமியர்களை நாட்டுக்குள் அனுமதிக்க கூடாது என்று கூறியது சரியே: டொலான்டு டிரம்ப் திட்டவட்டம்
x
தினத்தந்தி 22 Dec 2016 12:00 PM GMT (Updated: 22 Dec 2016 12:00 PM GMT)

அமெரிக்காவில் குடியரசு கட்சியின் சார்பில் அதிபர் தேர்தலில் வேட்பாளராக நின்ற டொனால்டு டிரம்ப், “நான் மட்டும் அமெரிக்காவின் ஜனாதிபதியால், அமெரிக்காவில் வசிக்கும் இஸ்லாமிய மக்களுக்கு தடைவிதிப்பேன். ஏனெனில் அமெரிக்காவில் தீவிரவாதம் தலைதூக்குவதற்கு இஸ்லாமியர்களே காரணம்,” என்றார். டொனால்டு டிரம்ப்பின் இப்பேச்சானது பெரும் சர்ச்சையாக வெடித்தது. டொனால்டு ட்ரம்ப், இஸ்லாமியர்களுக்கு எதிரான பல்வேறு சர்ச்சைக்குரிய யோசனைகளை முன்வைத்தார். இஸ்லாமியர்களுக்கு தனி பதிவேடு, அமெரிக்காவில் இஸ்லாமியர்கள் நுழைவதற்கு தடைவிதிப்பு போன்ற பல்வேறு யோசனைகள் மூலம் விமர்சனத்திற்கு உள்ளாகினார்.


வாஷிங்டன், 

இஸ்லாமியர்களை நாட்டுக்குள் அனுமதிக்க கூடாது என்று கூறியது சரியானதே என்று அமெரிக்காவின் புதிய அதிபராக தேர்வு செய்யப்பட்டு உள்ள டொனால்டு டிரம்ப் கூறிஉள்ளார். 

அமெரிக்காவில் குடியரசு கட்சியின் சார்பில் அதிபர் தேர்தலில் வேட்பாளராக நின்ற டொனால்டு டிரம்ப், “நான் மட்டும் அமெரிக்காவின் ஜனாதிபதியால், அமெரிக்காவில் வசிக்கும் இஸ்லாமிய மக்களுக்கு தடைவிதிப்பேன். ஏனெனில் அமெரிக்காவில் தீவிரவாதம் தலைதூக்குவதற்கு இஸ்லாமியர்களே காரணம்,” என்றார். டொனால்டு டிரம்ப்பின் இப்பேச்சானது பெரும் சர்ச்சையாக வெடித்தது. டொனால்டு ட்ரம்ப், இஸ்லாமியர்களுக்கு எதிரான பல்வேறு சர்ச்சைக்குரிய யோசனைகளை முன்வைத்தார். இஸ்லாமியர்களுக்கு தனி பதிவேடு, அமெரிக்காவில் இஸ்லாமியர்கள் நுழைவதற்கு தடைவிதிப்பு போன்ற பல்வேறு யோசனைகள் மூலம் விமர்சனத்திற்கு உள்ளாகினார். 
 
பல்வேறு விமர்சனத்திற்கு மத்தியிலும் அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றிப்பெற்று விரைவில் புதிய அதிபராக பொறுப்பு ஏற்கஉள்ளார்.

கடந்த திங்கள் கிழமை ஜெர்மனியில் மார்க்கெட் பகுதியில் ‘டிரக்’ தாக்குதல் நடத்தப்பட்டது, இதில் 12 பேர் உயிரிழந்தனர். பயங்கரவாத தாக்குதல் என்று ஜெர்மனி கூறிஉள்ளது. துருக்கி அங்காராவில் கலைக்கூடத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் துருக்கிக்கான ரஷ்ய தூதர் ஆண்ட்ரே கார்லோஃப் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்த இரு தாக்குதலுக்கும் டொனால்டு டிரம்ப் கடுமையாக கண்டனம் தெரிவித்தார். பயங்கரவாத கும்பல் பூமியில் இருந்து அகற்றப்பட வேண்டும், அதற்கான நடவடிக்கையில் ஈடுபடுவோம் என்றார் டொனால்டு டிரம்ப்.

இந்நிலையில், புளோரிடாவில் செய்தியாளர்களிடம் பேசிய டொனால்டு டிரம்ப், அண்மையில் துருக்கி மற்றும் ஜெர்மனியில் நிகழ்ந்த பயங்கரவாத தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்தார். “ஐரோப்பா, துருக்கியில் நிகழ்ந்திருப்பது பயங்கரமான சம்பவம். மிக மிக பயங்கரமானது. நம்முடைய உளவு மற்றும் நுண்ணறிவுப் பிரிவு நல்ல முறையில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. என்றாலும், மனிதாபிமானத்தின் மீது நடத்தப்பட்ட கோரமான தாக்குதலை சகிக்க முடியவில்லை” என்ற டொனால்டு டிரம்பிடம் 

இச்சம்பவங்களால், இஸ்லாமியர்கள் தொடர்பான உங்களின் திட்டங்களை மறுஆய்வு செய்யப்பட வேண்டியுள்ளதா? என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு டிரம்ப் பதில் அளிக்கையில், “என் திட்டங்கள் குறித்து எல்லோருக்கும் தெரியும். ஐரோப்பாவிலும், துருக்கியிலும் இப்போது நடந்திருப்பதைப் பார்க்கும்போது, என் யோசனை 100 சதவீதம் சரி என்பது நிரூபணமாகிறது’ என்றார். இந்த பேட்டியை தொடர்ந்து, அமெரிக்காவிற்குள் இஸ்லாமியர்கள் பிரவேசிக்க தடை விதிப்பது உள்ளிட்ட தனது திட்டங்களில் டொனாடு ட்ரம்ப் உறுதியுடன் இருப்பதாக அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிடத் தொடங்கிவிட்டன.


Next Story