சிலி நாட்டில் பயங்கர நிலநடுக்கம்: சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது


சிலி நாட்டில் பயங்கர நிலநடுக்கம்:  சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது
x
தினத்தந்தி 25 Dec 2016 9:54 PM GMT (Updated: 25 Dec 2016 9:54 PM GMT)

சிலி நாட்டின் தென்மேற்கு பகுதியில் நேற்று சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 7.7 புள்ளிகளாக பதிவான இந்த நிலநடுக்கத்தினால் அந்த பகுதி பயங்கரமாக குலுங்கியது. இதன் காரணமாக வீடுகளில் இருந்து மக்கள் வெளியேறினர். போர்ட்டோ குயிலான் நகருக்கு தென்மேற்கே 225 கிலோ மீட்டர் தூரத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் பூமிக்கு அடியில் 15 கிலோ மீட்டர் ஆழத்தில் மையம் கொண்டிருந்தது. சக்தி வாய்ந்த இந்த நிலநடுக்கத்தினால் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

சான்டியகோ,

சிலி நாட்டின் தென்மேற்கு பகுதியில் நேற்று சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 7.7 புள்ளிகளாக பதிவான இந்த நிலநடுக்கத்தினால் அந்த பகுதி பயங்கரமாக குலுங்கியது. இதன் காரணமாக வீடுகளில் இருந்து மக்கள் வெளியேறினர்.

போர்ட்டோ குயிலான் நகருக்கு தென்மேற்கே 225 கிலோ மீட்டர் தூரத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் பூமிக்கு அடியில் 15 கிலோ மீட்டர் ஆழத்தில் மையம் கொண்டிருந்தது. சக்தி வாய்ந்த இந்த நிலநடுக்கத்தினால் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்த நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட சேத விவரங்கள் பற்றிய தகவல் உடனடியாக தெரியவில்லை.

Next Story