பாகிஸ்தானில் ஹபீஸ் சையத்துக்கு வீட்டுக்காவல்


பாகிஸ்தானில் ஹபீஸ் சையத்துக்கு வீட்டுக்காவல்
x
தினத்தந்தி 30 Jan 2017 10:22 PM GMT (Updated: 30 Jan 2017 10:22 PM GMT)

ஜமாத் அத் தாவா அமைப்பின் தலைவர் ஹபீஸ் சையத். மும்பை குண்டுவெடிப்பில் முக்கிய குற்றவாளி ஆவார். மேலும் இந்தியாவில் நடந்த பல்வேறு தாக்குதல்களில் முக்கிய மூளையாக செயல்பட்டவர்.

லாகூர்,

ஜமாத் அத் தாவா அமைப்பின் தலைவர் ஹபீஸ் சையத். மும்பை குண்டுவெடிப்பில் முக்கிய குற்றவாளி ஆவார். மேலும் இந்தியாவில் நடந்த பல்வேறு தாக்குதல்களில் முக்கிய மூளையாக செயல்பட்டவர். அவர் தற்போது பாகிஸ்தான் நாட்டின் லாகூர் நகரில் உள்ளார்.

அமெரிக்க அரசின் புதிய ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட டெனால்டு டிரம்ப் தீவிரவாத இயக்கங்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்க பாகிஸ்தானுக்கு அறிவுறுத்தினார். மேலும் ஜமாத் அத் தாவா அமைப்பு மீதும், அதன் தலைவர் ஹபீஸ் சையத் மீதும் நடவடிக்கை எடுக்காவிட்டால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என எச்சரித்து இருந்தார்.

இந்த நிலையில் பஞ்சாப் மாகாண உள்துறை நேற்று ஹபீஸ் சையத்தை வீட்டுக்காவலில் வைக்க உத்தரவிட்டது. இதையடுத்து ஹபீஸ், லாகூரில் உள்ள வீட்டை விட்டு வெளியே வராதபடி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.

Next Story