சீனாவின் ரெயில் நிலையத்தில் ரோந்து பணிக்கு இயந்திர மனித போலீஸ்


சீனாவின் ரெயில் நிலையத்தில் ரோந்து பணிக்கு இயந்திர மனித போலீஸ்
x
தினத்தந்தி 25 Feb 2017 10:27 AM GMT (Updated: 25 Feb 2017 10:42 AM GMT)

சீனாவில் ரெயில் நிலையத்தில் ரோந்து பணிக்கு இயந்திர மனிதன் பயன்படுத்தப்படுகிறது.

சீனாவில் ஹெனான் உள்ள ழேங்க்ழோ கிழக்கு ரயில்வே நிலையத்தில் ரோந்து பணிக்கு  இயந்திர மனிதன் பயன்படுத்தப்படுகிறது. முதல் நாளே அங்கு மூண்ட சிறு தீயைக் கண்டறிந்த்அது. இயந்திர மனிதன்

1.6 மீட்டர் உயரமான இந்த இயந்திர மனித போலீஸ், குற்றவாளிகளையும், சந்தேகப்படும்படி யாரேனும் இருந்தால் அவர்களையும் முகத்தை வைத்து அடையாளம் காணும்.

தற்போது செங்ச்சாவ் ரெயில் நிலையத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டுவரும் அந்த எந்திரன் போலீஸ், அங்கு பணிபுரியும் ஊழியர்களையும் அவர்களது அடையாள அட்டை கொண்டு சரியாக அடையாளம் காண்கிறதாம்.

Next Story