சோமாலியாவில் சக்தி வாய்ந்த கார் வெடிகுண்டு தாக்குதல்; 5 பேர் பலி
சோமாலியா நாட்டின் தலைநகர் மொகதிசுவில் நடந்த சக்தி வாய்ந்த கார் வெடிகுண்டு தாக்குதலில் 5 பேர் கொல்லப்பட்டனர்.
மொகதிசு,
சோமாலியா நாட்டின் மொகதிசு நகரில் நேஷனல் தியேட்டர் அருகே வாகனம் ஒன்று வந்து கொண்டிருந்தது. அதனை சோதனை சாவடியில் வைத்து போலீசார் தடுத்து நிறுத்தினர். இதனை அடுத்து அந்த காரில் இருந்த தற்கொலை தீவிரவாதி சக்தி வாய்ந்த வெடிகுண்டு ஒன்றை வெடிக்க செய்துள்ளான்.
இதில் பாதுகாப்பு அதிகாரிகள், பொது மக்கள் என 5 பேர் பலியாகினர். 10 பேர் காயமடைந்துள்ளனர். இந்த எண்ணிக்கை அதிகரிக்க கூடும். இந்த சம்பவம் ஜனாதிபதி வளாக பகுதியில் இருந்து 1 கி.மீட்டர் தொலைவில் நடந்துள்ளது.
சோமாலியாவின் புதிய பிரதமர் ஹசன் கெயிர் இன்று தனது அமைச்சரவையில் இடம் பெற்றவர்களை அறிவித்துள்ள நிலையில் இந்த தாக்குதல் சம்பவம் நடந்துள்ளது.
சோமாலியா நாட்டின் மொகதிசு நகரில் நேஷனல் தியேட்டர் அருகே வாகனம் ஒன்று வந்து கொண்டிருந்தது. அதனை சோதனை சாவடியில் வைத்து போலீசார் தடுத்து நிறுத்தினர். இதனை அடுத்து அந்த காரில் இருந்த தற்கொலை தீவிரவாதி சக்தி வாய்ந்த வெடிகுண்டு ஒன்றை வெடிக்க செய்துள்ளான்.
இதில் பாதுகாப்பு அதிகாரிகள், பொது மக்கள் என 5 பேர் பலியாகினர். 10 பேர் காயமடைந்துள்ளனர். இந்த எண்ணிக்கை அதிகரிக்க கூடும். இந்த சம்பவம் ஜனாதிபதி வளாக பகுதியில் இருந்து 1 கி.மீட்டர் தொலைவில் நடந்துள்ளது.
சோமாலியாவின் புதிய பிரதமர் ஹசன் கெயிர் இன்று தனது அமைச்சரவையில் இடம் பெற்றவர்களை அறிவித்துள்ள நிலையில் இந்த தாக்குதல் சம்பவம் நடந்துள்ளது.
Next Story