6-வது முறையாக வடகொரியா, நாளை அணுகுண்டு சோதனை? ஏற்பாடுகள் நடப்பதை செயற்கை கோள் படங்கள் அம்பலப்படுத்தின


6-வது முறையாக வடகொரியா, நாளை அணுகுண்டு சோதனை? ஏற்பாடுகள் நடப்பதை செயற்கை கோள் படங்கள் அம்பலப்படுத்தின
x
தினத்தந்தி 13 April 2017 11:45 PM GMT (Updated: 13 April 2017 9:41 PM GMT)

வடகொரியா கடந்த 2006-ம் ஆண்டு முதன்முதலாக அணுகுண்டு சோதனையில் ஈடுபட்டது.

சியோல்,

தொடர்ந்து 2009, 2013 ஆகிய ஆண்டுகளில் தலா ஒரு முறையும், கடந்த ஆண்டு 2 முறையும் அணுகுண்டு சோதனைகளை நடத்தி உலக அரங்கை அதிர வைத்துள்ளது.

இந்த சோதனைகளுக்காக ஐ.நா. சபையும், அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகளும் அந்த நாட்டுக்கு எதிராக பொருளாதார தடைகளை விதித்துள்ளன.

ஆனாலும் வடகொரியா இதில் விடாப்பிடியுடன் இருப்பதால், அந்த நாட்டின்மீது ராணுவ நடவடிக்கை எடுக்க அமெரிக்கா தயாராகி வருகிறது.

இந்த நிலையில், வடகொரியா 6-வது முறையாக அணுகுண்டு சோதனை நடத்த தயாராகி வருவதாக தெரியவந்துள்ளது.

வடகொரியாவின் புங்கியேரி அணுகுண்டு சோதனை தளத்தில் மீண்டும் அணுகுண்டு சோதனை நடத்துவதற்கான ஏற்பாடுகள் நடந்து வருவது கடந்த 12-ந் தேதி எடுக்கப்பட்ட வணிக செயற்கை கோள் படங்கள் அம்பலப்படுத்தி உள்ளன.

இதை வடகொரியாவில் இயங்கி வருகிற ஒரு இணையதளம் தெரிவித்துள்ளது.

வடகொரிய நாட்டை நிர்மாணித்த கிம் இல் சுங்கின் 105-வது பிறந்த தினம் நாளை (சனிக்கிழமை) கொண்டாடுகிறபோது இந்த அணுகுண்டு சோதனை நடத்தப்படலாம் என தகவல்கள் கூறுகின்றன. இதை அமெரிக்காவும் உறுதி செய்துள்ளது.

Next Story