குல்பூஷன் ஜாதவை இந்திய தூதரக அதிகாரிகள் சந்திக்க பாகிஸ்தான் மீண்டும் அனுமதி மறுப்பு


குல்பூஷன் ஜாதவை இந்திய தூதரக அதிகாரிகள் சந்திக்க பாகிஸ்தான் மீண்டும் அனுமதி மறுப்பு
x
தினத்தந்தி 26 April 2017 4:05 PM GMT (Updated: 26 April 2017 4:04 PM GMT)

குல்பூஷன் ஜாதவை இந்திய தூதரக அதிகாரிகள் சந்திக்க அனுமதி கோரப்பட்ட நிலையில் பாகிஸ்தான் மீண்டும் அதற்கு அனுமதி மறுத்துள்ளது.

புதுடெல்லி,

பாகிஸ்தான் ராணுவ நீதிமன்றத்தால் மரண தண்டனை விதிக்கப்பட்ட  குல்பூஷன் ஜாதவை சந்திக்க, இந்திய தூதரக அதிகாரிகளுக்கு மீண்டும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. 

பாகிஸ்தான் ராணுவ நீதிமன்றத்தால் இந்திய உளவாளி என குற்றம் சாட்டப்பட்டு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ள குல்பூஷன் ஜாதவை சந்திக்க துணைத்தூதர் சந்திக்க அனுமதி தரவேண்டும் என கோரி பாகிஸ்தானுக்கு இந்தியா கோரிக்கை விடுத்துள்ளது. மேலும் மரண தண்டனையை எதிர்த்து இந்தியா மனுவும் தாக்கல் செய்துள்ளது.

பலுசிஸ்தானில் கடந்த வருடம் கைது செய்யப்பட்ட இந்தியர் குல்பூஷன் ஜாதவை இந்திய உளவு அமைப்பான ‘ரா’–வுக்காக பணியாற்றியதாக குற்றம் சாட்டிய பாகிஸ்தான் அவருக்கு மரண தண்டனையை விதித்தது. இந்தியாவின் கடும் எதிர்ப்பை அடுத்து பின் வாங்கிய பாகிஸ்தான்,  குல்பூஷன் ஜாதவ் தனக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை எதிர்த்து மேல் முறையீடு செய்யலாம் என்று தெரிவித்தது. இந்த நிலையில், பாகிஸ்தானுக்கான இந்திய தூதர் கவுதம் பிம்பாவாலே மூலமாக இந்தியா ஒரு கோரிக்கையை முன்வைத்தது. குல்பூஷன் ஜாதவை இந்திய தூதரக அதிகாரிகள் சந்திக்க அனுமதிக்க வேண்டும் என   பாகிஸ்தான் வெளியுறவுத்துறை செயலர் தெஹ்னிமா ஜனுஜாவிடம்  கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

எனினும், இதனை ஏற்க பாகிஸ்தான் மீண்டும் மறுப்பு தெரிவித்துள்ளது. குல்பூஷன் ஜாதவ் விவகாரம், நாட்டின் பாதுகாப்பு சம்பந்தப்பட்டதால், அதில் அந்நிய நாடுகள் தலையிட விரும்பவில்லை என்றும், பாகிஸ்தான் தரப்பில் கூறப்பட்டுள்ளது. இந்தியாவின் கோரிக்கையை பாகிஸ்தான் தொடர்ந்து மறுத்து வருவது குறிப்பிடத்தக்கது.


Next Story