ஆப்கானிஸ்தான் ராணுவ தளத்தில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 10 வீரர்கள் உயிரிழப்பு
ஆப்கானிஸ்தானில் ராணுவ தளத்தில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 10 வீரர்கள் உயிரிழந்தனர் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
கான்பூர்,
ஆப்கானிஸ்தானில் கந்தகார் மாகாணத்தில் ராணுவ தளத்தில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தி உள்ளனர். இந்த தாக்குதலில் 10 ஆப்கானிஸ்தான் ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். 9 ராணுவ வீரர்கள் காயம் அடைந்து உள்ளனர் என அந்நாட்டு ராணுவம் வெளியிட்டு உள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. சமீப காலமாக தலிபான் பயங்கரவாதிகள் வெளிநாட்டு படைகளை குறிவைத்து தாக்குதல் நடத்துவது அதிகரித்து காணப்படுகிறது.
Related Tags :
Next Story