இலங்கையில் கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி 91 பேர் பலி,110 பேர் மாயம்


இலங்கையில் கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி 91 பேர் பலி,110 பேர் மாயம்
x
தினத்தந்தி 27 May 2017 3:53 AM GMT (Updated: 27 May 2017 3:53 AM GMT)

இலங்கையில் கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி 91 பேர் பலியாகினர். 110 பேர் மாயமாகியுள்ளனர்.

கொழும்பு,

இலங்கையில் தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ளது. இதன் காரணமாக கடந்த ஒரு வாரமாக அங்கு கனமழை பெய்து வருகிறது. கனமழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. நிலச்சரிவும் ஏற்பட்டுள்ளதால் இலங்கையில் தெற்கு மற்றும் மேற்கு பகுதி  மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. 

நிலச்சரிவு, வெள்ளம் ஆகியவற்றில் சிக்கி இதுவரை 91 பேர் பலியாகி இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 110 பேர் காணாமல் போகியுள்ளனர். அவர்களை தேடும் பணி முடிக்கி விடப்பட்டுள்ளது. இந்த மீட்பு பணியில் இராணுவம், கடற்படை மற்றும் விமானப் படையினர் ஈடுபட்டுள்ளனர்.

கடந்த  2003 ஆம் ஆண்டுக்கு பிறகு ஏற்படும் மிகமோசமான வெள்ளம் இது என தெரிவிக்கப்பட்டுள்ளது. 2003 ஆம் ஆண்டு இதே மாதத்தில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் 10 ஆயிரம் வீடுகள் அழிந்தன. 250 பேர் பலியாகினர்.


Next Story