சோமாலியாவில் ராணுவம் நடத்திய தாக்குதலில் 18 பயங்கரவாதிகள் பலி


சோமாலியாவில் ராணுவம் நடத்திய தாக்குதலில் 18 பயங்கரவாதிகள் பலி
x
தினத்தந்தி 11 July 2017 3:45 AM IST (Updated: 11 July 2017 1:51 AM IST)
t-max-icont-min-icon

ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான சோமாலியாவில் அல்-சபாப் பயங்கரவாதிகள் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர்.

பசாசோ,

அல்கொய்தா ஆதரவு பெற்ற இந்த பயங்கரவாதிகளுக்கு எதிராக சோமாலியா ராணுவம் தீவிர தாக்குதல் நடத்தி வருகிறது.

அங்குள்ள பண்ட்லாந்து பிராந்தியத்தில் கல்கலா மலைப் பிரதேச பகுதிகளில் இந்த பயங்கரவாதிகள் முகாம்களை அமைத்து உள்ளனர். இந்த முகாம்களை குறிவைத்து ராணுவம் அதிரடி தாக்குதலை அரங்கேற்றியது. இதில் இருபிரிவினருக்கும் இடையே கடுமையான மோதல் ஏற்பட்டது.

இதில் 18 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். மேலும் பயங்கரவாதிகளின் 6 முகாம்களை அழித்து, அவர்களின் ஆயுதங்களை கைப்பற்றியதாக ராணுவம் நேற்று தெரிவித்து உள்ளது. இந்த தாக்குதலை பயங்கரவாதிகளும் உறுதிப்படுத்தி உள்ளனர். ஆனால் தங்கள் தரப்பில் எந்த உயிரிழப்பும் நிகழவில்லை என அவர்கள் மறுத்துள்ளனர்.

அல்-சபாப் பயங்கரவாதிகளுக்கு எதிராக போராடும் பண்ட்லாந்து பிரதேச ராணுவத்தினருக்கு, அமெரிக்க படையினர் ஆதரவும், பயிற்சியும் அளித்து வருகின்றனர். எனினும் இந்த தாக்குதலில் அமெரிக்க படையினரின் பங்களிப்பு இருந்ததா? என்பது குறித்து தெரியவில்லை.
1 More update

Next Story