கோழிபோல் முட்டையிடும் அதிசய சிறுவன் மருத்துவர்கள் அதிர்ச்சி
இந்தோனேசியாவில் கோழிபோல் முட்டையிடும் அதிசய சிறுவன் மருத்துவர்கள் நம்பமுடியாமல் தவிக்கிறார்கள். #Tamilnews
இந்தோனேசியாவில் சிறுவன் ஒருவன் கடந்த இரண்டு ஆண்டுகளாக 20 முட்டை போட்டுள்ள சம்பவம் மருத்துவர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தோனேசியாவின் குவாபகுதியைச் சேர்ந்தவர் அக்மல் 14 வயதுடைய இவர் கடந்த 2016-ஆம் ஆண்டு முதல் முட்டையிட்டு வருவதாக பெற்றோர்கள் கூறிவருகின்றனர். இது குறித்து அக்மலின் தந்தை கூறுகையில், அக்மல் கடந்த இரண்டு ஆண்டுகளாக தொடர்ந்து முட்டையிட்டு வருகிறான், இதுகுறித்து நாங்கள் பலமுறை மருத்துவமனைக்கு சென்றுள்ளோம்.
தற்போது கூட மருத்துவமனைக்கு வந்த பின் அவன் இரண்டு முட்டைகள் போட்டான். கடந்த இரண்டு ஆண்டுகளில் 20 முட்டையிட்டிருக்கிறான், அதை நான் உடைத்து பார்த்த போது மஞ்சள் நிறத்தில் இருப்பதாக கூறினார், மாணவன் தொடர்பான எக்ஸ்-ரே புகைப்படங்களையும் வெளியிட்டுள்ளார்.
ஆனால் மருத்துவர்களோ இது நிச்சயமாக இருக்க முடியாது, மனிதன் உடலில் முட்டை இருப்பதற்கு வாய்ப்பே இல்லை, மருத்துவமனையில் முட்டை போட்டதாக கூறுகின்றனர். நாங்கள் அதை நேரடியாக பார்க்கவே இல்லை என்று கூறுகின்றனர். மேலும் மருத்துவர்கள் மாணவனை முழுமையாக பரிசோதித்து வருவதாக அங்கிருக்கும் தனியார் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
Related Tags :
Next Story