வடகொரியா பஸ் விபத்தில் 36 பேர் பலி
வடகொரியாவில் நிகழ்ந்த பஸ் விபத்தில் 36 பேர் பரிதாபமாக பலியாயினர். #Northkorea #BusAccident
பெய்ஜிங்,
வடகொரியாவில் நிகழ்ந்த பஸ் விபத்தில் அதில் பயணம் செய்த 32 சீனா சுற்றுலா பயணிகள் மற்றும் 4 வட கொரியர்கள் உட்பட 36 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
வடகொரியா நாட்டில் உள்ள பியோங்கியாங் நகரில் நேற்று இரவு பலத்த மழை பெய்தது. அப்போது அங்குள்ள ஹூங்காய் சாலையில், சீனா சுற்றுலா பயணிகளோடு பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது, மோசமான வானிலை காரணமாக இந்த விபத்து நிகழ்ந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விபத்தில் பேருந்தில் பயணம் செய்த, 32 சீனா சுற்றுலா பயணிகள், 4 வடகொரியர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், விபத்தில் படுகாயமடைந்தவர்களை மீட்டு மருத்தவமனைக்கு கொண்டு செல்லும் பணிகள் நடந்து வருகிறது. விபத்துக்கான முழுமையான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருவதாகவும், பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்ககூடும் என்றும் சீன வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
வடகொரியாவில் நிகழ்ந்த பஸ் விபத்தில் அதில் பயணம் செய்த 32 சீனா சுற்றுலா பயணிகள் மற்றும் 4 வட கொரியர்கள் உட்பட 36 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
வடகொரியா நாட்டில் உள்ள பியோங்கியாங் நகரில் நேற்று இரவு பலத்த மழை பெய்தது. அப்போது அங்குள்ள ஹூங்காய் சாலையில், சீனா சுற்றுலா பயணிகளோடு பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது, மோசமான வானிலை காரணமாக இந்த விபத்து நிகழ்ந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விபத்தில் பேருந்தில் பயணம் செய்த, 32 சீனா சுற்றுலா பயணிகள், 4 வடகொரியர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், விபத்தில் படுகாயமடைந்தவர்களை மீட்டு மருத்தவமனைக்கு கொண்டு செல்லும் பணிகள் நடந்து வருகிறது. விபத்துக்கான முழுமையான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருவதாகவும், பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்ககூடும் என்றும் சீன வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
Related Tags :
Next Story