இந்தோனேஷியா தேவாலய தாக்குதல்; தற்கொலைதாரிகள் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் - போலீஸ்
இந்தோனேஷியாவில் தேவாலயங்களில் தாக்குதல் நடத்திய தற்கொலைதாரிகள் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் என போலீஸ் கூறிஉள்ளது. #Indonesia
ஜகார்த்தா,
உலகில் இஸ்லாமியர்கள் அதிகம் வாழும் இந்தோனேஷியாவின், இரண்டாவது பெரிய நகரமான சுரபயாவில் மூன்று கிறிஸ்தவ தேவாலயங்களை குறிவைத்து தற்கொலை வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தாக்குதல்களில் 11 பேர் உயிரிழந்து உள்ளனர், போலீசார் உள்பட 41 பேர் காயம் அடைந்து உள்ளனர் என போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இரு குழந்தைகளுடன் பெண் ஒருவர் உள்பட 5 பேர் இந்த தற்கொலை வெடிகுண்டு தாக்குதல்களை நடத்தி உள்ளார்கள் என போலீஸ் அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
பாலியில் கடந்த 2002-ம் ஆண்டு அல்-கொய்தாவுடன் தொடர்புடைய பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 202 பேர் கொன்று குவிக்கப்பட்டார்கள், இதனையடுத்து பயங்கரவாதத்திற்கு எதிராக அந்நாட்டு அரசு ஸ்திரமான நடவடிக்கையை மேற்கொண்டது.
மத்திய கிழக்கு நாடுகளில் ஐ.எஸ். பயங்கரவாத இயக்கத்தின் வளார்ச்சி, தொடர்பு உள்ளூர் பயங்கரவாத குழுக்களுக்கு புத்துணர்வு கிடைத்ததால் இந்தோனேஷியா புது எச்சரிக்கையை எதிர்க்கொண்டு உள்ளது. இந்நிலையில் இத்தாக்குதல் நடத்தப்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இந்நிலையில் தேவாலயங்களில் தாக்குதல் நடத்தியவர்கள் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் என போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்தோனேஷியாவை சேர்ந்த பெற்றோர், தங்களுடைய இரண்டு மகள்கள் மற்றும் இரண்டு மகன்களுடன் சேர்ந்து இந்த தாக்குதலை நடத்தி உள்ளனர் என்று போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்து உள்ள இந்தோனேஷியா அதிபர், பயங்கரவாதத்திற்கு எதிராக நாம் அனைவரும் ஒன்றாக கைகோர்க்க வேண்டும் என கூறிஉள்ளார். இதற்கிடையே இந்த தாக்குதல்களுக்கு ஐ.எஸ். பயங்கரவாத இயக்கம் பொறுப்பு ஏற்று உள்ளது.
Related Tags :
Next Story