காதலித்த வாலிபரின் கண்களை கரண்டியால் தோண்டி எடுத்த தந்தை சகோதர் கைது
காதலித்த வாலிபரின் கண்களை கரண்டியால் தோண்டி எடுத்த தந்தை மற்றும் சகோதரரை போலீசார் கைது செய்தனர்.
இஸ்லாமாபாத்
காதலுக்கு கண் இல்லை என்பார்கள். இங்கு காதலுக்காக கண்ணையே எடுத்து உள்ளனர்.
பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் உள்ள நசீராபாத் பகுதியை சேர்ந்தவர் தோஸ்த் முகமது (70), இவரது இளையமகன் அப்துல் பாகி (22)
இவர் ஒரு பெண்ணை காதலித்து வந்தார். தான் காதலித்த பெண்ணை திருமணம் செய்ய போவதாக பெற்றோரிடம், கூறினார். இதற்கு வீட்டில் கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. ஆனால் பாகி தான் காதலித்த பெண்ணை திருமணம் செய்யப்போவதாக ஒற்றை காலில் நின்று உள்ளார்.
இதனால் கோபம் அடைந்த பாகியின் தந்தையும், சகோதரர்களும், அவரை அறைக்கு தூக்கி சென்று கட்டிலில் கட்டிவைத்து, உணவருந்தும் கரண்டியால் கண்ணை தோண்டி எடுத்தனர்.
பாகிக்கு உதவாமல் இருக்க வேண்டும் என்பதற்காக, அவரது தாயாரை மற்றொரு அறையில் அடைத்து வைத்துவிட்டனர்.
தற்போது அப்துல் பாகி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தந்தை மற்றும் சகோதரர்களை போலீசார் கைது செய்தனர்.
Related Tags :
Next Story