இந்திய வம்சாவளி பெண் மருந்தாளுநர் வட இங்கிலாந்தில் படுகொலை


இந்திய வம்சாவளி பெண் மருந்தாளுநர் வட இங்கிலாந்தில் படுகொலை
x
தினத்தந்தி 17 May 2018 1:02 PM GMT (Updated: 17 May 2018 1:02 PM GMT)

இங்கிலாந்து நாட்டில் இந்திய வம்சாவளி பெண் மருந்தாளுநர் ஒருவர் மர்ம நபரால் வீட்டில் கொலை செய்யப்பட்டு கிடந்துள்ளார்.

லண்டன்,

இங்கிலாந்தின் வடக்கே மிடில்ஸ்பரோ நகரில் லின்தோர்ப் புறநகரில் வசித்து வந்தவர் ஜெசிகா பட்டேல் (வயது 34).  இவரது கணவர் மிதேஷ் (வயது 36).  இவர்கள் இருவரும் மான்செஸ்டர் நகரில் உள்ள பல்கலை கழகத்தில் படித்தபொழுது சந்தித்து கொண்டனர்.

ஜெசிகா தனது கணவருடன் மருந்து கடை ஒன்றை வீட்டின் அருகிலேயே கடந்த 3 வருடங்களாக நடத்தி வந்துள்ளார்.

இந்நிலையில், ஜெசிகா தனது வீட்டில் கொலை செய்யப்பட்டு கிடந்துள்ளார்.  இந்த வழக்கில் இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை.  இதில் தொடர்புடைய நபரை போலீசார் தேடி வருகின்றனர்.

இதுபற்றி ஜெசிகாவின் வீட்டிற்கு அருகில் வசித்து வரும் ஒருவர் கூறும்பொழுது, அவர்கள் இருவரும் உண்மையில் இனிமையான, நட்புடன் பழக கூடிய தம்பதி.  அவர்கள் மருந்து கடையை எடுத்து நடத்தி வருவதில் இருந்து இந்த பகுதியில் நன்கு பிரபலம் ஆனவர்கள் என கூறியுள்ளார்.


Next Story