கியூபாவில் விமானம் தரையில் விழுந்து நொறுங்கியது: 100-க்கும் மேற்பட்டோர் பலி, 3 பேர் உயிருடன் மீட்பு


கியூபாவில் விமானம் தரையில் விழுந்து  நொறுங்கியது: 100-க்கும் மேற்பட்டோர் பலி, 3 பேர் உயிருடன் மீட்பு
x
தினத்தந்தி 19 May 2018 1:17 AM GMT (Updated: 19 May 2018 1:17 AM GMT)

கியூபாவில் விமானம் விழுந்து நொறுங்கிய விபத்தில், 100-க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். #FlightCrash

ஹவானா, 

கியூபாவின் ஹவானா விமான நிலையத்திலிருந்து, ஹோல்குயின் நகருக்கு போயிங் 737 ரக பயணிகள் விமானம் ஒன்று புறப்பட்டது. அதில் 105 பயணிகள் மற்றும் 9 விமான சிப்பந்திகள் உட்பட 114 பேர் பயணம் செய்ததாக கூறப்படுகிறது. இந்த  விமான புறப்பட்ட சிறிது நேரத்தில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக விமான நிலையத்திற்கு அருகில் விழுந்து நொறுங்கியது. இதையடுத்து உடனடியாக மீட்புப்பணிகள் மேற்கொள்ளப்பட்டது.

இதனிடையே இந்த விமான விபத்தில் 100-க்கும் அதிகமானோர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் விமானத்தில் பயணம் செய்த 3 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. அந்த விமானம் 1979-ம் ஆண்டில் வடிவமைக்கப்பட்டது எனவும், கடந்த 39 ஆண்டுகளாக பயன்பாட்டில் இருந்ததாகவும் அரசு தெரிவித்துள்ளது.


Next Story