பாகிஸ்தானில் கிருஷ்ணர் கோவில் புதுப்பிப்பு ரூ.2 கோடி நிதியை பஞ்சாப் மாகாண அரசு ஒதுக்கியது
பாகிஸ்தானில் ராவல்பிண்டி நகரில் ஒரு கிருஷ்ணர் கோவில் உள்ளது. 1897-ம் ஆண்டு, காஞ்சிமால், உஜாகர் மால் ராம் ராச்பால் ஆகியோரால் கட்டப்பட்டது.
இஸ்லாமாபாத்,
கிருஷ்ணர் கோவிலில் காலையில் ஒரு முறை, மாலையில் ஒரு முறை என தினமும் 2 முறை பூஜை, வழிபாடுகள் நடந்து வருகின்றன.
இஸ்லாமாபாத்-ராவல்பிண்டி இரட்டை நகரில் செயல்பட்டு வருகிற ஒரே இந்துக் கோவிலும் இதுதான்.
இந்த கோவிலில் திருப்பணிகள் செய்து புதுப்பிக்க அந்த நாட்டின் பஞ்சாப் மாகாண அரசு முடிவு செய்து உள்ளது. அந்த வகையில் ரூ.2 கோடியை அந்த அரசு ஒதுக்கீடு செய்து உள்ளது.
இந்தக் கோவில் பணிகளுக்கு பஞ்சாப் மாகாண அரசு நிதி ஒதுக்கீடு செய்து இருப்பது அங்கு உள்ள இந்து மக்களுக்கு மகிழ்ச்சியை அளித்து உள்ளது.
கிருஷ்ணர் கோவிலில் காலையில் ஒரு முறை, மாலையில் ஒரு முறை என தினமும் 2 முறை பூஜை, வழிபாடுகள் நடந்து வருகின்றன.
இஸ்லாமாபாத்-ராவல்பிண்டி இரட்டை நகரில் செயல்பட்டு வருகிற ஒரே இந்துக் கோவிலும் இதுதான்.
இந்த கோவிலில் திருப்பணிகள் செய்து புதுப்பிக்க அந்த நாட்டின் பஞ்சாப் மாகாண அரசு முடிவு செய்து உள்ளது. அந்த வகையில் ரூ.2 கோடியை அந்த அரசு ஒதுக்கீடு செய்து உள்ளது.
இது குறித்து அறநிலைய சொத்துக்கள் வாரியத்தின் துணை நிர்வாகி முகமது ஆசிப் கூறுகையில், “ராவல்பிண்டி கிருஷ்ணர் கோவிலை புதுப்பிக்க வேண்டும் என்று பஞ்சாப் மாகாண சட்டசபையில் வேண்டுகோள் விடுக்கப்பட்டது.
அதைத் தொடர்ந்து இந்தப் பணிகளுக்காக ரூ.2 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. இந்தப் பணத்தை கொண்டு அந்தக் கோவில் புதுப்பிக்கப்படும். பணிகள் முடிகிற வரையில் கருவறை மூடப்பட்டு இருக்கும். விரைவில் புதுப்பிப்பு பணிகள் தொடங்கி விடும். இந்தப் பணிகள் முடிந்தவுடன் ஏராளமான மக்கள் கோவிலுக்கு வந்து வழிபடுகிற நிலை உருவாகும்.
இந்தக் கோவில் பணிகளுக்கு பஞ்சாப் மாகாண அரசு நிதி ஒதுக்கீடு செய்து இருப்பது அங்கு உள்ள இந்து மக்களுக்கு மகிழ்ச்சியை அளித்து உள்ளது.
Related Tags :
Next Story