இளவரசர் ஹரி-மெர்க்கல்லின் திருமணம்: கொடுத்த தாம்பூலப் பையில் இருந்தது என்ன?
இளவரசர் ஹரி-மெர்க்கல்லின் திருமணம் விருந்தினர்களுக்கு கொடுத்த தாம்பூலப் இருந்தது என்ன? என்பது குறித்து ஒருவர் டுவிட்டரில் கூறி உள்ளார்.
லண்டன்
இங்கிலாந்து இளவரசர் ஹரி-மெர்க்கல்லின் திருமணம் கடந்த 19-ஆம் தேதி சனிக்கிழமை வின்ஸ்டரில் உள்ள தேவாலயத்தில் கோலகலமாக நடைபெற்றது. இவர்கள் திருமணத்திற்கு சுமார் 1000 பேர் அழைக்கப்பட்டிருந்தனர். அப்படி திருமணத்திற்கு வந்தவர்களை வெறும் கையோடு அனுப்பாமல் அவர்களுக்கு ஒரு நீல நிற தாம்பூலப்பை ஒன்று கொடுக்கப்பட்டது.
பார்க்கவே மிக அழகாக இருந்த அந்த பரிசுப் பையில் அப்படி என்ன தான் இருக்கிறது என்று பலரும் நினைத்துக் கொண்டிருக்கும் வேளையில், புகைப்படக் கலைஞரான ஜேம்ஸ் வாட்லிங் அது தொடர்பான புகைப்படத்தை வெளியிட்டதுடன் அதில் என்ன இருக்கிறது என்பதையும் குறிப்பிட்டுள்ளார்.
அதில், தண்ணீர், ஹரி-மெர்க்கல் என்று பொறிக்கப்பட்டிருக்கும் எழுத்துக்களுடன் சாக்லெட் நாணயம், அதே போன்று ஹரி-மெர்க்கல் என்ற எழுத்துக்களுடன் கூடிய காந்தம் மற்றும் 20 சதவீத ஆபருடன் ஒரு கிப்ட் வவுச்சரும் கொடுக்கப்பட்டுள்ளது.
A lovely touch for the guests in the Castle for todays’s #RoyalWedding, complete with water and a huge Harry and Meghan chocolate coin. pic.twitter.com/lODWk7fN3o
— James Whatling (@JWhatling) 19 May 2018
Related Tags :
Next Story