பாகிஸ்தானில் அனல் காற்றுக்கு 3 நாட்களில் 65 பேர் பலி


பாகிஸ்தானில் அனல் காற்றுக்கு 3 நாட்களில் 65 பேர் பலி
x
தினத்தந்தி 22 May 2018 8:45 AM GMT (Updated: 22 May 2018 8:45 AM GMT)

பாகிஸ்தானின் கராச்சி நகரில் அனல் காற்றுக்கு கடந்த 3 நாட்களில் 65 பேர் பலியாகி உள்ளனர்.

கராச்சி,

பாகிஸ்தானின் கராச்சி நகரில் கடந்த 3 நாட்களாக அனல் காற்று வீசி வருகிறது.  நேற்று வெப்பநிலை 44 டிகிரியை தொட்டது.  இந்த நிலையில், கராச்சி நகரில் இதுவரை 114 உடல்கள் தொண்டு நிறுவன பிணவறைக்கு கொண்டு வரப்பட்டன.

அவற்றில் 65 உடல்கள் அனல் காற்றால் பலியாகி உள்ளனர் என கூறப்படுகிறது.  அவர்களில் பலர் லாந்தி மற்றும் கொராங்கி பகுதிகளை சேர்ந்தவர்கள்.  இவர்களில் பெருமளவிலானோர் வீட்டில் இருந்தபொழுது இறந்துள்ளனர்.  அவர்களில் 6 முதல் 78 வரையிலான வயது கொண்டோர் உள்ளனர்.

பொதுமக்கள் சரியான நேரத்தில் மருத்துவ உதவி கிடைக்காத நிலையில் மரணம் அடைந்து உள்ளனர்.  கராச்சி மேயர் வாசீம் அக்தர் பொதுமக்கள் தங்களது வீடுகளை விட்டு பகல் நேரங்களில் வெளியே வராமல் தவிர்க்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளார்.


Next Story