மாயமான இந்தோனேஷிய பெண்ணின் சடலம் 23 அடி மலைப்பாம்பு வயிற்றில் கண்டுபிடிப்பு


மாயமான இந்தோனேஷிய பெண்ணின் சடலம் 23 அடி மலைப்பாம்பு வயிற்றில் கண்டுபிடிப்பு
x
தினத்தந்தி 16 Jun 2018 9:02 AM GMT (Updated: 16 Jun 2018 9:02 AM GMT)

மாயமான இந்தோனேஷிய பெண்ணின் சடலம் 23 அடி மலைப்பாம்பு வயிற்றில் கண்டுபிடிக்கப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஜகார்த்தா,

இந்தோனேஷியாவின் முனா தீவில் உள்ள பெர்சியாபான் லாவேலா கிராமத்தை சேர்ந்தவர் வா திபா (வயது 54). கடந்த வியாழக்கிழமை தன்னுடைய தோட்டத்திற்கு சென்ற வா திபா வீட்டிற்கு திரும்பவில்லை. இதனால் 100-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் கொண்ட கிராமத்தில் பெரும் பீதி ஏற்பட்டது. வா திபாவின் உறவினர்கள் மற்றும் கிராம மக்கள் அவரை வலைவீசி தேடினார்கள். எங்கு தேடியும் கிடைக்கவில்லை. இந்நிலையில் நேற்று அப்பகுதியில் 23 அடிக்கொண்ட மலைப்பாம்பு ஒன்று எங்கும் செல்ல முடியாது உருண்டு வந்து உள்ளது.

இதனையடுத்து சந்தேம் அடைந்த பொதுமக்கள் மலைப்பாம்பின் வயிற்று பகுதியை வெட்டி பார்த்து உள்ளனர், அப்போது வா திபா உள்ளே சடலமாக இருந்து உள்ளார். அவருடைய சடலத்தை மீட்டு உள்ளனர். மலைப்பாம்பு கிடந்த இடத்தில் இருந்து சுமார் 30 மீட்டர் தொலைவில் வா திபாவின் செருப்பு கிடந்து உள்ளது. அவருடைய தலையை முதலில் விழுங்கியுள்ள பாம்பு பின்னர் உடல் பகுதியை உள்ளே இழுத்து உள்ளது. திபாவின் தோட்டம் செங்குத்தான பாறைகள், குகைகள் என கரடு முரடாண பகுதியில் உள்ளது. அங்கு பாம்புகள் நடமாட்டம் என்பது சர்வசாதாரணமானது என உள்ளூர் மக்கள் தெரிவிக்கிறார்கள். 

Next Story