மலைப்பாம்பின் பிடியில் இருந்து நாயை காப்பாற்றிய இளைஞர்கள்


மலைப்பாம்பின் பிடியில் இருந்து நாயை காப்பாற்றிய இளைஞர்கள்
x
தினத்தந்தி 22 Jun 2018 11:28 AM GMT (Updated: 22 Jun 2018 11:28 AM GMT)

மலைப்பாம்பின் பிடியில் இருந்து நாயை இளைஞர்கள் இருவர் காப்பாற்றி உள்ளனர்.


தாய்லாந்தில் மலைப்பாம்பின் பிடியில் சிக்கி உயிருக்கு போராடிய நாயை இரண்டு நபர்கள் சேர்ந்து காப்பாற்றியுள்ளனர். சுமார் 4 நிமிடங்கள் ஓடும் அந்த வீடியோவில், நாயும்,மலைப்பாம்பும் பின்னிப்பிணைந்து ஒருவரையொருவர் மல்லுக்கட்டிக்கொண்டிருக்கின்றன. 

இதனைப்பார்த்த நபர் ஒரு கம்பினை எடுத்து மலைப்பாம்பின் வாலில் பிடித்து இழுக்கிறார். இருப்பினும் இவை இரண்டும் உருண்ட படி இருந்துள்ளன. மற்றொரு நபரும் இணைந்து குச்சியை வைத்து மலைப்பாம்பிடம் இருந்து நாயை மீட்டுள்ளனர். இந்த வீடியோ பேஸ்புக்கில் பதிவிடப்பட்டு 75,000 முறை பார்க்கப்பட்டுள்ளது.




Next Story