சீனாவில் இரசாயன ஆலையில் தீ விபத்து: 19 பேர் பலி
சீனாவில் இராசயன ஆலை ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 19 பேர் பலியாகினர். மேலும் 12 பேர் படுகாயமடைந்தனர். #ChinaChemicalBlast
ஷாங்காய்,
சீனாவின் தென்மேற்கு பகுதியில் உள்ள சிச்சுவான் மாகாணத்தில் இரசாயன ஆலை ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் நேற்று மாலை திடீரென ஆலையில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. மள மள வென ஆலையில் பரவிய தீயால் எங்கும் புகைமூட்டம் காணப்பட்டது.
இதனிடையே ஆலையில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 19 பேர் உயிரிழந்தனர். மேலும் 12 பேர் படுகாயம் அடைந்தனர். கடந்த 2015 ஆம் ஆண்டு சீனாவின் டியாஜின் மாகாணத்தில் ஆலை ஒன்றில் ஏற்பட்ட விபத்தில் 165 பேர் பலியானது குறிப்பிடத்தக்கது. சீன அரசு தொழில்துறை பாதுகாப்பை மேம்படுத்துவதற்காக (குறிப்பாக நிலக்கரி சுரங்கங்கள் மற்றும் இரசாயன ஆலைகள்) பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் நிலையில் இவ்விபத்து குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story