வடகொரியாவுக்கு அணு ஆயுதங்களை அழிக்க கால வரையறை எதுவும் நிர்ணயிக்கப்படவில்லை -டொனால்டு டிரம்ப்


வடகொரியாவுக்கு அணு ஆயுதங்களை அழிக்க கால வரையறை எதுவும் நிர்ணயிக்கப்படவில்லை -டொனால்டு டிரம்ப்
x
தினத்தந்தி 19 July 2018 8:22 AM GMT (Updated: 19 July 2018 8:22 AM GMT)

வடகொரியாவுக்கு அணு ஆயுதங்களை அழிக்க கால வரையறை எதுவும் நிர்ணயிக்கப்படவில்லை என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார்.

வாஷிங்டன்

கடந்த ஜூன் மாதம் வடகொரிய ஜனாதிபதி கிங் ஜாங் உன் மற்றும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் இருவரும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த பேச்சுவார்த்தையின் போது  அணு ஆயுதங்களை அழிக்க வடகொரியா சம்மதம் தெரிவித்து இருந்தது. அதற்காக அந்நாட்டிற்கு பாதுகாப்பு வழங்க அமெரிக்காவும் ஒப்புக் கொண்டது. அதனைத் தொடர்ந்து, இதுதொடர்பாக ஒப்பந்தம் ஒன்றும் கையெழுத்தானது. 

இந்நிலையில், இருநாடுகளுக்கும் இடையே அணு ஆயுத அழிப்பு தொடர்பான பேச்சுவார்த்தை தொடங்கியுள்ளதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் கூறுகையில்,

 ‘வடகொரியாவுடனான பேச்சுவார்த்தை சுமூகமாக நடைபெற்று வருகிறது. அணு ஆயுதங்களை அழிக்க கால வரையறை எதுவும் நிர்ணயிக்கப்படவில்லை. வேக உச்ச வரம்பு இல்லை. இந்த விவகாரத்தில் அவசரப்பட தேவையில்லை. 

வடகொரியா மீதான பொருளாதார தடைகள் தொடர்கின்றன. அங்கு புதிதாக ஆயுத சோதனை எதுவும் நடைபெறவில்லை. இரு நாடுகளுக்கு இடையிலான உறவு நன்றாக இருப்பதாக நினைக்கிறேன். அடுத்து என்ன நடக்கிறது என்று பொறுத்திருந்து பார்ப்போம்’ என தெரிவித்துள்ளார்.

Next Story