நெறிமுறைகளை தாண்டி மேற்கொள்ளப்பட்ட வேற்றுக்கிரக மம்மியின் ஆய்வு


நெறிமுறைகளை தாண்டி மேற்கொள்ளப்பட்ட வேற்றுக்கிரக மம்மியின் ஆய்வு
x
தினத்தந்தி 23 July 2018 12:24 PM GMT (Updated: 23 July 2018 12:24 PM GMT)

நெறிமுறைகளை தாண்டி மேற்கொள்ளப்பட்ட வேற்றுக்கிரக மம்மியின் ஆய்வில் விஞ்ஞானிகள் தற்போது நெருக்கடியை எதிர்நோக்கியுள்ளனர்.

சிலி நாட்டு மலைப்பகுதியில் லா நோரியாவின் கைவிடப்பட்ட நைட்ரேட் சுரங்க நகரத்தில்   6 அங்குல உயரம் கொண்ட மனித உடலமைப்பை ஒத்த எழும்புக் கூடு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது. ஆஸ்கர் முனோல்ஸ் என்பவர் இதனை கண்டுபிடித்தார்

6 அங்குல உயரமான வேற்றுக்கிரகவாசிகள் பூமிக்கு வருகை தந்துள்ளதாகவும் அவர்கள் பூமியில் வாழ்ந்து வந்தமைக்கும் ஆதாரங்கள் கிடைக்கப் பெற்றுள்ளதாகவும் ஊடகங்கள் செய்தி வெளியிட்டன.  அதனைத் தொடர்ந்து இது குறித்த ஆய்வுகள் தீவிரப்படுத்தப்பட்டன. அதனால் மேலும் பல எலும்புக்கூடுகளும் கண்டு பிடிக்கப்பட்டன.

பின்னர் ஸ்டீவன் கீரீயர் எனப்படும் ஆய்வாளர் மற்றும் எலும்பியல் டி.என்.ஏ நிபுணர் மூலமாக ஆய்வுகள் நடத்தப்பட்டது. அதில் கிடைத்த ஆய்வு முடிவுகள் ஆச்சரியத்தை அளித்துள்ளது.

அதாவது குறித்த எலும்புகளோடு பூமிக்கு சம்பந்தப்படாத உலோகம் கலந்துள்ளதாகவும் கண்டறியப்பட்டுள்ளது.பின்னர் இதன் ஆய்வுகள் வேற்றுக்கிரகங்கள் தொடர்பில் ஆய்வு செய்பவர்களோடு இணைத்துக்கொள்ளப்பட்டு, வேறு கோணங்களில் ஆய்வுகள் நடத்தப்பட்டுள்ளன.

அந்த ஆய்வுகள் மூலம் குறித்த எலும்புகள் வேற்றுக்கிரகவாசிகளுடையவை எனவும் அவர்கள் பூமிக்கு வந்து சென்றுள்ளார்கள் எனவும் ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.குறித்த உயிரினம் சிரியஸ் எனப்படும் நட்சத்திரத் தொகுதிக்கு உரியவையாக இருக்கலாம் என்றும் அவர்கள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

மேலும் இவை வேற்றுக்கிரகவாசிகள் தொடர்பில் கிடைக்கப்பெற்ற மிகப்பெரிய ஆதாரம் அதனால் வேற்றுக் கிரகவாசிகள் இருப்பது உண்மை எனவும் ஆய்வாளர்கள் நம்பிக்கை வெளியிட்டனர்.

இந்த மம்மி ஒரு கருவின் அளவு இருப்பினும், ஆரம்ப சோதனைகளில் எலும்புகள் ஆறு முதல் எட்டு வயதிற்குட்பட்ட குழந்தைக்கு இருப்பது போன்று  இருப்பதாக  தற்போதைய , டி.என்.ஏ சோதனையில்  எலும்புகள் மற்றும் பிற முரண்பாடுகளின் மதிப்பிடப்பட்ட வயது மரபணு பிறழ்வுகளின் விளைவாக இருக்கலாம் என்பதைக் காட்டுகிறது.

ஜெனோம் ஆராய்ச்சி இதழில் இதன் முழு விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

விதிவிலக்காக சிறிய உயரம் உடையதாகவும், அவர் எலும்புக்கூட்டை பல அசாதாரண உடல் அம்சங்களை கொண்டு உள்ளது.ஒரு விஞ்ஞானக் குழு தனிப்பட்ட முறையில் மரபணுவை பகுத்தாய்வு செய்தது - ஒரு மனிதருக்கான மரபணு படிவத்தை, இதன் செல்கள் மையக்கருவில் அடங்கியுள்ளது.

சிரிஸஸ் என்று அழைக்கப்படும் ஒரு ஆவணப்படம், அது வேற்று கிரகவாசிகளின் ஆதாரமாக இருக்கலாம் எனக் கூட பரிந்துரைத்தது.

இந்த ஆய்வு குறித்து கலிபோர்னியாவில் ஸ்டான்போர்ட் பல்கலைக்கழக மருத்துவ பள்ளியில் நுண்ணுயிரியல் மற்றும் நோய் தடுப்பு மருந்து.  பேராசிரியர் கேரி நோலன்  கூறியதாவது:-

"எலும்புகளின் விகிதாசார முதிர்ச்சியாக இருந்தது,   மாதிரியானது சிறியதாக இருந்த போதிலும், உடல் மிகவும் முதிர்ச்சியடைந்ததாக தோன்றுகிறது.இந்த முரண்பாடு மிகவும் ஆராய்ச்சிக்கு வழிவகுத்தது. அதனால், மரபணு மாற்றப்பட்ட மரபணுக்களில் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்டவை இதற்கு காரணம் என்று நாங்கள் நம்புகிறோம்."நாங்கள் உண்மையில் பெண் பிறந்த பிறகு உடனடியாக  இறந்தார்  என நம்புகிறேன். என கூறி இருந்தார்.

 ஆய்வு மேற்கொண்டு கடந்த மார்ச் வெளியிட்ட விஞ்ஞானிகள் தற்போது நெருக்கடியை எதிர்நோக்கியுள்ளனர், அவர்கள் ஆய்வு செய்த முறையை சில தினங்களுக்கு முன்னதாக மற்றுமெரு குழுவொன்று முன்னைய ஆய்வு மீதான மதிப்பீட்டு கருத்துக்களை முன்வைத்திருந்தது. இவர்கள் முன்னைய ஆய்வை விமர்சித்திருந்தனர். அதாவது முன்னைய ஆய்வு வெளிப்படுத்தியது போல் அது இயற்கைக்குப் புறம்பான உடலமைப்பல்ல. மாறாக யோனி பிறப்பின் போது அதன் தலை நீட்சியடைந்திருக்கலாம் என்கின்றனர். அதேநேரம் முன்னர் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு தேவையற்றதொன்று மற்றும் நிதி முறைகளுக்கு அப்பாற்பட்டது என தற்போதைய ஆய்வாளர்கள் குற்றம் சுமத்துகின்றனர்.

Next Story