மற்ற பெண்களுடன் தொடர்பு என மனைவி சந்தேகம்; கணவரின் ஆணுறுப்பு துண்டிப்பு


மற்ற பெண்களுடன் தொடர்பு என மனைவி சந்தேகம்; கணவரின் ஆணுறுப்பு துண்டிப்பு
x
தினத்தந்தி 2 Aug 2018 11:42 AM GMT (Updated: 2 Aug 2018 11:42 AM GMT)

மற்ற பெண்களுடன் தொடர்பு இருக்கும் என்ற சந்தேகத்தில் கணவரின் ஆணுறுப்பினை மனைவி கத்திரிகோலால் துண்டித்துள்ளார்.

பெங்செங்,

சீனாவின் ஜியாங்சி மாகாணத்தின் பெங்செங் நகரை சேர்ந்தவர் லீ.  இவருக்கு புது வேலை கிடைத்தவுடன் மற்ற பெண்களுடன் தொடர்பு வைத்து கொண்டு தன்னை ஏமாற்றுகிறார் என மனைவி நினைத்து உள்ளார்.

இதனை தொடர்ந்து மற்ற பெண்களுடன் தொடர்பு வைத்து கொள்ள கூடாது என்றும், மற்ற பெண்களிடம் பேச கூடாது, அவர்கள் தொலைபேசியில் பேசினால் பதிலளிக்க கூடாது என்றும் மனைவி கண்டிப்புடன் கூறியுள்ளார்.  பெண்களை நோக்கி சிரிக்கவும் கூடாது என மனைவி உத்தரவிட்டார்.

இதற்கு பிறகும் கணவன் மீது மனைவிக்கு ஏற்பட்ட சந்தேகம் குறையவில்லை.  இந்த நிலையில், காலையில் குளியலறைக்கு கணவன் சென்றுள்ளார்.  ஆடைகளின்றி நிர்வாண நிலையில் இருந்த அவரை நெருங்கிய மனைவி தன்னிடம் இருந்த கத்திரிக்கோலால் ஆணுறுப்பினை துண்டித்து விட்டார்.  இதனால் வலியால் கணவர் அலறியுள்ளார்.  தொடர்ந்து ரத்தம் வழிந்தோட அதனை கட்டுப்படுத்தும் நடவடிக்கையை எடுத்து விட்டு அங்கிருந்து மருத்துவமனைக்கு சென்று அவர் சிகிச்சை பெற்றார்.

அதன்பின் மருத்துவர்கள் அவருக்கு வெற்றிகரமுடன் சிகிச்சை அளித்து முடித்தனர்.  ஆனால் சிகிச்சைக்கு பின் மிக கவனமுடன் இருக்க வேண்டும் என்றும் அவருக்கு மருத்துவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story