வெடிகுண்டு மிரட்டலால் 4 விமானங்கள் அவசர அவரசமாக தரையிறக்கம்


வெடிகுண்டு மிரட்டலால் 4 விமானங்கள் அவசர அவரசமாக தரையிறக்கம்
x
தினத்தந்தி 17 Aug 2018 2:19 AM GMT (Updated: 17 Aug 2018 2:19 AM GMT)

சிலி மற்றும் பெரு நாட்டில் வெடிகுண்டு மிரட்டலால் வானில் பறந்து கொண்டிருந்த 4 விமானங்கள் அவசர அவசரமாக தரையிறக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. #4Planes #BombThreats

சாண்டியாகோ,

சிலி  மற்றும் பெரு நாட்டில் வெடிகுண்டு மிரட்டலால் வானில் பறந்து கொண்டிருந்த 4 விமானங்கள் அவசர அவசரமாக தரையிறக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இச்சம்பவம் குறித்து சிலி நாட்டு விமானபோக்குவரத்து நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

”லதாம் ஏர்லைன்ஸ் என்ற தனியார் நிறுவனத்திற்கு சொந்தமான 2 விமானங்கள் மற்றும் சிலி நாட்டில் குறைந்த செலவில் இயங்கும் ஸ்கை நிறுவனத்திற்கு சொந்தமான 2 விமானங்கள், பயணிகளுடன் வானில் பறந்து கொண்டிருந்தது. இந்நிலையில் விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதாக தகவல் பரவியது. இதனால் பெரு மற்றும் சிலி ஆகிய நகரங்களில் விமானங்கள் அவசர அவசரமாக தரையிறக்கப்பட்டன. அங்கிருந்த போலீசார் மற்றும் விமானநிலைய பாதுகாவலர்கள் விமானத்தில் பயணம் செய்த பயணிகளின் பெயர் பட்டியல், பயண உடமைகள் மற்றும் விமானத்தின் அனைத்து பகுதிகளிலும் சோதனை நடத்தினர்” என சிலி நாட்டு விமானபோக்குவரத்து நிறுவனம் அறிக்கையை வெளியிட்டுள்ளது. 

Next Story