துருக்கி: விமானப்படை தாக்குதலில் 19 குர்திஷ் போராளிகள் பலி


துருக்கி: விமானப்படை தாக்குதலில் 19 குர்திஷ் போராளிகள் பலி
x
தினத்தந்தி 1 Sep 2018 3:49 AM GMT (Updated: 1 Sep 2018 3:49 AM GMT)

துருக்கியில் நடைபெற்ற விமானப்படை தாக்குதலில் 19 குர்திஷ் போராளிகள் கொல்லப்பட்டனர். #Turkey

இஸ்தான்புல்,

ஈராக்கின் வடக்கு பகுதியில் உள்ள சாப் மாகாணத்தில், காரா மற்றும் ஹக்குர்க் பகுதிகளில், துருக்கி விமானப்படை நடத்திய வான் வழித்தாக்குதலில் குர்திஷ் போராளிகள் 19 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு ராணுவம் தெரிவித்துள்ளது.

ஈராக்கில் உள்ள குர்திஸ்தான் தொழிலாளர்கள் கட்சி எனும் அமைப்பை அமெரிக்கா, ஐரோப்பிய யூனியன் மற்றும் துருக்கி உள்ளிட்ட நாடுகள் பயங்கரவாத அமைப்பாக அறிவித்துள்ளன. பெரும்பாலும் ஈராக்கின் வடக்கு பகுதியில் ஆதிக்கம் செலுத்திவரும் குர்திஸ்தான் பயங்கரவாதிகள், கோன்டில் மலைப்பகுதியில் முகாம்களை அமைத்துள்ளனர். அங்கிருந்தபடி துருக்கி எல்லையில் பயங்கரவாத தாக்குதல்களை அவ்வப்போது நடத்தி வருகின்றனர். இவர்களை வேட்டையாடும் பணியில் துருக்கி நாட்டின் விமானப்படைகள் ஈடுபட்டுள்ளன.

துருக்கி அரசுக்கு எதிராக எழுச்சி பெற குர்திஸ்தான் தொழிலாளர்கள் கட்சி, 1984ம் ஆண்டு துவங்கியதில் இருந்து இதுவரை 40 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


Next Story